Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிங்கம்புணரி சிவன் கோயில்களில் ... கரூர் ஈஸ்வரன் கோவில்களில் ஆருத்ரா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜன
2018
02:01

திருக்கோவிலுார்: விழுப்புரம் மாவட்டம், முழுவதும் உள்ள கோவில்களில், நேற்று ஆருத்ரா தரிசன விழா நடந்தது. திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில்‚ நேற்று காலை 8:00 மணிக்கு சிவகாமசுந்தரி சமேத நடராஜர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. காலை 11:00 மணிக்கு கோவில் உட்பிரகாரத்தில், சுந்தரர் துாது செல்லும் திருவூடல் உற்சவம் நடந்தது. கண்டாச்சிபுரம் ராமநாதீஸ்வரர் கோவிலில் நேற்று காலை நடராஜருக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. பின்னர் தமிழ் வேதவார வழிபாட்டுக் குழுவினர், திருவெம்பாவை வாசிக்கும் நிகழ்ச்சியும், தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து மாடவீதியில் கோட்டை நடனமிடும் நிகழ்ச்சியும், நடராஜர் சுவாமிகள் வீதியுலா நடந்தது.

சங்கராபுரம்: தேவபாண்டலம் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நடந்தது. விழாவிற்கு பிரதோஷ வழிபாட்டு மன்ற தலைவர் நாட்டார் ராமலிங்கம் தலைமை தாங்கினார். ரவி குருக்கள், கணபதி முன்னிலையில் ஆனந்த நடராஜ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள நடராஜ சுவாமிக்கு, நேற்று காலை சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது.

பாணாம்பட்டு: விழுப்புரம் அடுத்த பாணாம்பட்டு காமாட்சி அம்பாள் சமேதராய், வேதபுரீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் நடந்தது. காலை 6:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 7:30 மணிக்கு தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து, உற்சவர்கள் சிவன், பார்வதி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது.

வானுார்: உப்புவேலுார் கிராமத்தில் உள்ள திருமுகேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு ஸ்ரீமத் ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்தது. காலை 9:00 மணிக்கு அன்னம்பாலிப்பு நிகழ்ச்சி நடந்தது.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சமேத சிதம்பரேஸ்வரர் கோவி லில் நடராஜருக்கு ஆருத்ரா தரிசன சிறப்பு வழிபாடு நடந்தது. பஞ்சமூர்த்தி தெய்வங்களுக்கு மார்கழி சிறப்பு பூஜைகள் நடத்தி, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து, ருத்ர மந்திரங்களை வாசித்து, பூஜைகள் நடந்தது. சிவனடியார்கள் சிவபுராணம் பாடியபின் திரை நீக்கி ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதேபோல் நீலமங்க லம் செம்பொற்சோதிநாதர் கோவிலிலும் ஆருத்ரா தரிசன விழா நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar