Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்பை ஆணி வேராக்குவோம்:கிறிஸ்துமஸ் ... சனி பகவான் இடம் பெயர்ந்தார்:திருநள்ளாறில் பக்தர்கள் புனித நீராடல்! சனி பகவான் இடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பாதயாத்திரை பக்தர்களின் பிரச்னைகள் தீருமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 டிச
2011
10:12

பழநி : பழநிக்கு பாதயாத்திரை பக்தர்கள் இப்போதே வர துவங்கி விட்டனர். ஜனவரி மாதத்தில் இதன் எண்ணிக்கை அதிகரித்து, தை பூசத்தின் போது உச்சத்தை தொடும். அதற்கு முன், பக்தர்களுக்கு போதிய வசதிகளை செய்ய வேண்டும். பழநி கோயில் தைப்பூச விழாவிற்கு, மதுரை, திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை வருவர். இந்த ஆண்டுக்கான விழா, பிப்., 7 ல், நடைபெற உள்ளது. பிரச்னை ஏராளம்: திண்டுக்கல், மதுரை, கொழுமம், தாராபுரம் ரோடுகளில், ஆண்டுதோறும் பக்தர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். பாதயாத்திரை பக்தர்களுக்காக அகலப்படுத்தப்பட்ட ரோடு, சமீபத்திய மழையால் சேதம் அடைந்துள்ளது. நடுரோட்டில் பக்தர்கள் நடந்து செல்வதால், கடந்த காலங்களில் விபத்துகள் நடந்துள்ளன. இதை தவிர்க்க, ரோடுகளை சீரமைக்க வேண்டியது அவசியம்.

உவ்வே: இது தவிர, ரோடு ஓர கடைகளில், சுகாதாரமற்ற உணவு, அதிக விலைக்கு விற்கப்படுகிறது. பல ஓட்டல்களில் விலைப்பட்டியல் இல்லாமல், கூடுதல் வசூல் நடக்கிறது. தடை செய்யப்பட்ட பாலிதீன் உபயோகம் தாராளமாக உள்ளது. மலைக்கோயிலைச் சுற்றிலும், நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் உள்ளன. நகராட்சி, கோயில் நிர்வாகம், போலீசார் இதை கண்டுகொள்ளவில்லை. திருடர்களின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. பஸ் ஸ்டாண்டில் டிரைவர்களின் விருப்பம்போல் பஸ்களை நிறுத்துவதால், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. கோயிலை சுற்றி சுகாதாரம் காக்கவும், பக்தர்களின் வசதி, பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உணவுப் பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் இப்போதே முயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான், பிரச்னைகள் இன்றி தைப்பூச விழாவை நடத்த முடியும். கலெக்டர் நாகராஜன் நடவடிக்கை எடுப்பாரா...

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பைரவர் விரதம் அனைத்து அஷ்டமி திதிகளிலும் கொண்டாடப்படுகிறது. அதில் செவ்வாய்க்கிழமை வருகின்ற ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar