Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்பை ஆணி வேராக்குவோம்:கிறிஸ்துமஸ் ... சனி பகவான் இடம் பெயர்ந்தார்:திருநள்ளாறில் பக்தர்கள் புனித நீராடல்! சனி பகவான் இடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பாதயாத்திரை பக்தர்களின் பிரச்னைகள் தீருமா?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 டிச
2011
10:12

பழநி : பழநிக்கு பாதயாத்திரை பக்தர்கள் இப்போதே வர துவங்கி விட்டனர். ஜனவரி மாதத்தில் இதன் எண்ணிக்கை அதிகரித்து, தை பூசத்தின் போது உச்சத்தை தொடும். அதற்கு முன், பக்தர்களுக்கு போதிய வசதிகளை செய்ய வேண்டும். பழநி கோயில் தைப்பூச விழாவிற்கு, மதுரை, திருச்சி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை வருவர். இந்த ஆண்டுக்கான விழா, பிப்., 7 ல், நடைபெற உள்ளது. பிரச்னை ஏராளம்: திண்டுக்கல், மதுரை, கொழுமம், தாராபுரம் ரோடுகளில், ஆண்டுதோறும் பக்தர்கள் சந்திக்கும் பிரச்னைகள் ஏராளம். பாதயாத்திரை பக்தர்களுக்காக அகலப்படுத்தப்பட்ட ரோடு, சமீபத்திய மழையால் சேதம் அடைந்துள்ளது. நடுரோட்டில் பக்தர்கள் நடந்து செல்வதால், கடந்த காலங்களில் விபத்துகள் நடந்துள்ளன. இதை தவிர்க்க, ரோடுகளை சீரமைக்க வேண்டியது அவசியம்.

உவ்வே: இது தவிர, ரோடு ஓர கடைகளில், சுகாதாரமற்ற உணவு, அதிக விலைக்கு விற்கப்படுகிறது. பல ஓட்டல்களில் விலைப்பட்டியல் இல்லாமல், கூடுதல் வசூல் நடக்கிறது. தடை செய்யப்பட்ட பாலிதீன் உபயோகம் தாராளமாக உள்ளது. மலைக்கோயிலைச் சுற்றிலும், நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் உள்ளன. நகராட்சி, கோயில் நிர்வாகம், போலீசார் இதை கண்டுகொள்ளவில்லை. திருடர்களின் நடமாட்டமும் அதிகரித்து வருகிறது. பஸ் ஸ்டாண்டில் டிரைவர்களின் விருப்பம்போல் பஸ்களை நிறுத்துவதால், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. கோயிலை சுற்றி சுகாதாரம் காக்கவும், பக்தர்களின் வசதி, பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், உணவுப் பொருட்களின் தரத்தை மேம்படுத்தவும், மாவட்ட நிர்வாகம் இப்போதே முயற்சி எடுக்க வேண்டும். அப்போது தான், பிரச்னைகள் இன்றி தைப்பூச விழாவை நடத்த முடியும். கலெக்டர் நாகராஜன் நடவடிக்கை எடுப்பாரா...

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை வசிஷ்டேஸ்வரர் கோவிலில், (பரிகார ஸ்தலம்),  குரு ... மேலும்
 
temple news
சோழவந்தான், சோழவந்தான் அருகே குருவித்துறை குருபகவான் கோயிலில் இன்று மாலை குரு பெயர்ச்சி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
திருக்கோஷ்டியூர், திருப்புத்தூர் அருகே பட்டமங்கலம் தட்சிணாமூர்த்தி கோயிலில்  குரு பெயர்ச்சியை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூரில், பேரூர் பட்டி நாயகர் சைவ நெறி அறக்கட்டளை சார்பில், 450 கிலோ பூக்கள் கொண்டு, மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar