காஞ்சிபுரம் : இயற்பகை நாயனார் குரு பூஜை விழா, காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் நடந்தது. மார்கழி மாதம், உத்திரம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் இயற்பகை நாயனார். 63 நாயன்மார்களில் ஒருவரான இவரின் குருபூஜை விழா, காஞ்சிபுரம் அறுபத்து மூவர் குருபூஜை விழாக்குழு சார்பில், கச்சபேஸ்வரர் கோவிவில் நடந்தது.விழாவையொட்டி, சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடந்தது. இதில், விழாக்குழுவினர் பங்கேற்றனர்.