வேதகிரீஸ்வரர் கோவில் கோபுரத்திற்கு வண்ணம் பூசப்படுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10ஜன 2018 12:01
திருக்கழுக்குன்றம் : திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் நான்கு ராஜகோபுரத்திற்கும் வர்ணம் பூச வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருக்கழுக்குன்றத்தில் பல்லவர் பொக்கிஷமான வேதகிரீஸ்வரர் கோவில், மலை மீது உள்ளது. அதன் தாழக்கோவிலாக பக்தவத்சலேஸ்வரர் மற்றும் திரிபுரசுந்தரி அம்மன் கோவில்கள் உள்ளன.ராமேஸ்வரம் செல்லும் முன், இங்குள்ள சுவாமியை வழிபடுகின்றனர்.கோவிலின் நான்கு திசை ராஜகோபுரங்கள், பொலிவின்றி காணப்படுகின்றன. சிற்பங்களுக்கு வர்ணம் பூசாமல், அழுக்கு அடைந்து உள்ளன.ராஜகோபுரத்திற்கு வர்ணம் பூசி, பொலிவு ஏற்படுத்த பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.