ராமேஸ்வரம் கோயிலில் உண்டியல் காணிக்கை ரூ.71.78 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜன 2018 11:01
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை ரூ. 71.78 லட்சம் வருவாயாக கிடைத்தது. ராமேஸ்வரம் கோயிலில் 32 நாள்களுக்கு பிறகு நேற்று முன்தினம் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் சன்னதியில் முன்புள்ள உண்டியல்களை ஊழியர்கள் திறந்து, கோயில் கல்யாண மண்டபத்தில் இணை ஆணையர் மங்கையர்கரசி முன்னிலையில் எண்ணப்பட்டது. இதில் ரொக்க பணம் ரூ. 71 லட்சத்து 78 ஆயிரத்து 346 ரூபாயும், தங்கம் 80 கிராம், வெள்ளி 3 கிலோ 25 கிராம் காணிக்கையாக கிடைத்தது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் உதவி ஆணையர் பாலகிருஷ்ணன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலைசெல்வன், கண்ணன், பர்வதவர்த்தினி பெண்கள் பள்ளி மாணவிகள் பலர் பங்கேற்றனர்.