பதிவு செய்த நாள்
16
ஜன
2018
01:01
திருக்கழுக்குன்றம்;திருக்கழுக்குன்றத்தில் வாழ்ந்த சித்தருக்கு, கருங்கல் கோவில் அமைக்கும், பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.துாத்துக்குடி மாவட்டம், கடையனோடை கிராமத்தை சேர்ந்த சுப்பையா சுவாமி, 1908ல் பிறந்தவர். மதுரை அமெரிக்கன் கல்லுாரியில், பி.ஏ. படித்த இவர், வள்ளலார் வழியை பின்பற்றி, திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலை குகையில், ஒன்பது ஆண்டுகள் யோகத்தில் இருந்தார்.தொடர்ந்து, 1960ல் சித்தியடைந்தார். இவர் நினைவாக, பேருந்து நிலையம் அருகே சிறிய கோவில் உள்ளது.இந்த கோவிலை, பல லட்சம் ரூபாய் செலவில், கருங்கல்லால் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.