பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று, அமாவாசையை முன்னிட்டு, மூலவர் பழ பந்தலில் வேணுகோபாலன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், நேற்று காலை 7:00 மணிக்கு சுப்ரபாதம், 7:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 9:00 மணிக்கு உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி அறையில் உபய நாச்சியாருடன் சிறப்பு அலங்காரத்திலும், மூலவர் சரநாராயண பெருமாள் பழ பந்தலில் வேணுகோபாலனாக பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மதியம் 1:00 மணிக்கு உச்சிகால பூஜை, மாலை 4:00 மணிக்கு நடைதிறப்பு, மாலை சாயரட்சை பூஜை, இரவு 9:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.