நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு நரியன் ஓடை கரையில் உள்ள பாதாளகாளி கோவிலில் உள்ள பிரத்தியங்கராதேவிக்கு தை அமாவாசையை முன்னிட்டு நிகும்பலா யாகம் நடந்தது. விழாவையொட்டி, நேற்று மதியம் 12:00 மணிக்கு யாக வேள்விகள் துவங்கி, சிறப்பு பூஜை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு யாகத்தில் மிளகாய் வற்றல்கள் கொட்டப்பட்டு சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து பிரத்தியங்கராதேவிக்கு கலச அபிேஷகம் நடந்தது. பின்னர், 1:15 மணிக்கு பாதாளகாளிக்கு சிறப்பு பூஜை நடந்தது. பூஜையில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். பூஜையை ஆலய நிர்வாகி அறிவழகன் தலைமையிலான குருக்கள் பூஜையை செய்தனர்.