பதிவு செய்த நாள்
29
ஜன
2018
01:01
பட்டரை : பட்டரை கிராமத்தில், வரும் 31ம் தேதி, தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. மணவாள நகர் - அதிகத்துார் சாலையில் அமைந்துள்ளது பட்டரை கிராமம். இங்குள்ள வள்ளல் பெருமாள் கோவிலில், வரும், 31ம் தேதி 144வது தைப்பூச திருவிழா நடைபெற உள்ளது. அன்று, காலை, 6:30 மணிக்கு, அகவல் பாராயணமும், காலை, 8:30 மணிக்கு, சன்மார்க்க கொடியேற்றுதலும், காலை, 10:00 மணிக்கு, சிறப்பு சொற்பொழிவும் நடைபெறும். தொடர்ந்து, பகல் 12:30 மணிக்கு ஜோதி தரிசனமும், பிற்பகல், 1:00 மணிக்கு பசியாற்றுவித்தலும் நடைபெறும்.
நேற்று, காலை, 6:00 மணிக்கு, பூர்ணாஹூதி மற்றும் அன்பருத ஸ்நானம் ஆகிய நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெற்றது. பஜனை நிகழ்ச்சியில் புதுச்சேரி, நரசாரெட்டிக்கண்டிகை, கச்சூர், வெங்கடாபுரம், வெலமகண்டிகை, ஊத்துக்கோட்டை, கோவர்தனகிரி, சூளூர்பேட்டை, மாதர்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து பஜனை குழுக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.