Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவொற்றியூர் தியாகராஜர் கோவிலில் ... காஞ்சிபுரம் கோவில்களில் தைப்பூச விழா விமரிசை காஞ்சிபுரம் கோவில்களில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூச திருவிழா கோலாகலம் : மலேஷியாவில் பக்தி பரவசம்
எழுத்தின் அளவு:
தைப்பூச திருவிழா கோலாகலம் : மலேஷியாவில் பக்தி பரவசம்

பதிவு செய்த நாள்

01 பிப்
2018
12:02

பத்துமலை: மலேஷியாவில், பத்துமலை முருகன் கோவிலில், நேற்று, தைப்பூசத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் பங்கேற்று, அலகு குத்தி, காவடி சுமந்து, நேர்த்திக் கடன் செலுத்தினர். தமிழர்கள் அதிகளவில் வாழும், தென்கிழக்காசிய நாடுகளான, மலேஷியா, சிங்கப்பூரில், தைப்பூசம், ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

நேற்று, மலேஷியாவில் உள்ள பத்துமலை முருகன் கோவிலில், நேற்று, தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. தைப்பூசத்தையொட்டி, ஆயிரக்கணக்கான தமிழர்களும், பிற ஹிந்துக்களும், பத்துமலையில், 272 படிகள் ஏறி, முருகன் கோவிலுக்கு சென்றனர். பலர், முதுகிலும், கன்னத்திலும், நாக்கிலும் அலகு குத்தி, காவடி சுமந்து, நேர்த்திக் கடன் செலுத்தினர்; பலர், பால் குடம் சுமந்து சென்று, முருகனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். பத்து மலையில் ஏறுகையில், வழியில் உள்ள, உலகின் மிக உயரமான, 141 அடி முருகன் சிலையை, பக்தர்கள் வழிபட்டனர். இதுகுறித்து, தைப்பூச விழாவில் பங்கேற்ற பக்தர், விஜயலட்சுமி விமலன் கூறுகையில், ”கடந்த, 25 ஆண்டாக, தைப்பூசத் திருவிழாவில் பங்கேற்று வருகிறேன். இறைவன் அருளால், எனக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. ”அதற்காக, முருகப் பெருமானுக்கு நன்றி கூற, பத்துமலை கோவிலுக்கு வந்துள்ளேன்,” என்றார். மலேஷியாவின், 3.1 கோடி மக்களில், பெரும்பாலானோர், முஸ்லிம்கள். இங்கு, 20 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அன்னை காவிரிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, ஆடிபதினெட்டாம் பெருக்கு விழா, நதி, ஆற்றங்கரைகளிலும் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; தேனி மாவட்டம் குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் ஆடிப்பெருந்திருவிழாவின் முக்கிய ... மேலும்
 
temple news
தமிழகத்திலுள்ள நீர் நிலைகளில் ஆடி மாதத்தில் நீர் வரத்து அதிகமாகி பெருக்கெடுத்து ஓடும். நதிகளும் நீர் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: தமிழ் மாதமான ஆடியின் 18ம் நாள், ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தப்படுகிறது. இந்நாளில், ... மேலும்
 
temple news
கோவை; கோவை மாவட்டம், அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆடி மாதம் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar