Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிறிஸ்துமஸ்: கிறிஸ்து பிறப்பின் ... திருமலைக்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடு: நடந்து வந்தால் தரிசனம் உறுதி! திருமலைக்கு பாதயாத்திரை வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமை மீண்டும் மலரட்டும்:கிறிஸ்துமஸ் நன்னாள் சிந்தனை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 டிச
2011
03:12

ஒரே ஒரு மனிதன்(ஆதாம்), வழியாய் பாவம் இந்த உலகத்தில் நுழைந்தது. ஒருவரின் குற்றம் எல்லா மனிதருக்கும் தண்டனை தீர்ப்பாய் அமைந்தது. அதுபோல் ஒரே ஒருவரின்(இயேசு கிறிஸ்து) ஏற்புடைய செயல் எல்லா மனிதருக்கும் வாழ்வளிக்கும் விடுதலை தீர்ப்பாய் அமைந்தது. ஒரு மனிதரின் கீழ்ப்படியாமையால் பலர் பாவிகளானது போல், ஒருவரின் கீழ்ப்படிதலால் பலர் கடவுளுக்கு ஏற்புடையவராகினர்.கிறிஸ்தவர்கள், அர்ப்பணஉணர்வோடு தங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக நிலைநிறுத்திக்கொள்ள வேண்டுமென்பதற்காக, திருச்சபை, ஏழு திருவருட் சாதனங்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளது. ஞானஸ்நானம், பாவசங்கீர்த்தனம், புதுநன்மை, உறுதிபூசுதல், திருமணம் அல்லது குருத்துவம், நோயில் பூசுதலை முழுமையாக நிறைவேற்றுபவர்களே கிறிஸ்தவர்களாக கருதப்படுவர். கூட்டுக்குடும்பமாக இருந்தபோது கடைபிடிக்கப்பட்ட நெறிமுறைகள் அனைத்தும் காற்றோடு கலந்து மறைந்து விட்டன. ஒவ்வொரு நாளும், இரவு விளக்கு ஏற்றியவுடன் அனைவரும் முழந்தாளிட்டு ஜெபம் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

ஜெபித்ததும் குழந்தைகள் தங்கள் பெற்றோரிடமும், பெற்றோர் பெரியவர்களிடமும் முழந்தாளிட்டு, நெற்றியில் சிலுவை அடையாளம் பெற்றுக்கொண்ட பின் தான், படிப்பது உள்ளிட்ட வேலைகளில் ஈடுபடுவர்.இதனால் குடும்பங்களில் அமைதியும், சமாதானமும், நட்புறவும் நீடித்திருந்தது. ஞானஸ்நானத்தின் போது உடனிருக்கும் ஞானப்பெற்றோருக்கு தனி மரியாதை இருந்தது. தாய், தந்தையரைவிட தங்கள் ஞானப்பெற்றோரிடம் ஆலோசனை பெறுவதில் குழந்தைகள் ஆர்வம் காட்டினர். ஆனால், இன்று எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. ஞாயிறு திருப்பலிகூட கடமைக்காக என்ற மனப்பான்மை ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாறவேண்டும். பெற்றோர்கள் தங்கள் பழைய வாழ்க்கையை மீட்டெடுக்க வேண்டும். குழந்தைகளை ஆன்மிகப் பாதையில் அழைத்து செல்ல ஞானபெற்றோர் முன்வரவேண்டும். இறைவேண்டலில் நிலைத்திருப்பதுதான் கிறிஸ்தவர்களின் அடையாளம் என்பதை குழந்தைகளிடம் வலியுறுத்தவேண்டும். புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகளை குழந்தைகள் தெரிந்து கொண்டு அவர்களை தங்கள் வாழ்க்கையின் வழிகாட்டிகளாக ஏற்றுக்கொண்டு முன்னேறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். திருத்தலங்களை தரிசித்து அங்குள்ள பாதுகாவலரின் ஆசீரை நிறைவாக பெற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து கிறிஸ்தவர் களின் குடும்பங்களிலும் அன்பும், அமைதியும், சமாதானமும் என்றென்றும் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar