மீனாட்சி கோயிலில் மீண்டும் அதிர்ச்சி: பசுபதிநாதர் சன்னதி மேற்கூரை சேதம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07பிப் 2018 11:02
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தீ விபத்து ஏற்பட்ட பகுதிக்கு அருகில் பசுபதி நாதர் சன்னதியின் மேற்கூரை கற்கள் நேற்று இரவு இடிந்து விழுந்தன.
மீனாட்சி அம்மன் கோயில் கிழக்கு கோபுர பகுதி கடைகளில் பிப்.,2 ல் ஏற்பட்ட தீ விபத்தில் வீரவசந்தராயர் மண்ப மேற்கூரை இடிந்து விழுந்தது. தொன்மையான சிற்பங்கள், ஓவியங்கள், கல்துாண்கள் சேதம் அடைந்தன. இதனை தொடர்ந்து இந்த பகுதியில் யாரும் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நேற்று இரவு 8:45 மணிக்கு வீரவசந்தராயர் மண்பத்தில் தொட்டி நந்தியின் வலதுபுறம் உள்ள பசுபதிநாதர் சன்னதியின் மேற்கூரையில் இருந்து இரண்டு கற்கள் பெயர்ந்து விழுந்தன. இது மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருட்டாக இருப்பதால் இரவில் அப்பகுதிக்கு யாரும் செல்ல முடியவில்லை. இன்று காலையில்தான் சேதம் குறித்த முழு விபரம் தெரியும்.