Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நரிப்பையூரில் மண்ணில் புதைந்த ... பூட்டியே கிடக்கும் தூண் மண்டபம் :புனரமைத்தால் பாதுகாக்கப்படும் பழமை பூட்டியே கிடக்கும் தூண் மண்டபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வேம்பில் குடிகொண்ட முத்தாளம்மன்
எழுத்தின் அளவு:
வேம்பில் குடிகொண்ட முத்தாளம்மன்

பதிவு செய்த நாள்

06 பிப்
2018
02:02

மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே வேப்பமரத்தில் அருள்பாலிக்கும் முத்தாளம்மனை பல தலைமுறையாக மக்கள் வழிபடுகின்றனர். தெய்வங்கள் மரத்தில்  வீற்றிருந்து அருள்பாலிப்பதாக நம்பிக்கை உள்ளது. இதனால் தான் கோவில்களில் ஸ்தலவிருட்சம், அதாவது, சம்பந்தப்பட்ட கோவில்களுக்குரிய  மரங்கள் உள்ளன. மடத்துக்குளம் அருகே தெற்கு கண்ணாடிபுத்துார் கிராமத்தில், வேப்ப மரத்தில், முத்தாளம்மன் குடிகொண்டு அருள்பாலிப்பதாக  நம்பிக்கை உள்ளது.

பஸ்ஸ்டாப்பிலிருந்து சிறிது, தெற்குநோக்கி சென்றால் போஸ்ட் ஆபீஸ் அருகே பெரிய வேப்பமரம் உள்ளது.இந்த மரத்தை முத்தாளம்மனாக  மக்கள் வழிபடுகின்றனர். தரைப்பகுதியில் வேல், ஈட்டி நடப்பட்டுள்ளன. மரத்துக்கு மஞ்சள் துணி சுற்றியுள்ளனர். விளக்கு ஏற்ற சிறிய மேடை  உண்டு. இந்த அமைப்பை சுற்றி சுற்றுச்சுவர் கட்டப்பட்டு, கதவும் பொருத்தியுள்ளனர்.அப்பகுதி மக்கள் கூறியதாவது: பல தலைமுறையாக  முத்தாளம்மனை வணங்குகிறோம். கிராமத்தின் மையப்பகுதியாக இந்த இடம் உள்ளது. திருவிழா, விசேஷங்கள் மற்றும் அனைத்து நல்ல  காரியங்கள் குறித்து இந்த மரத்தின் முன்பு கூட்டமாக மக்கள் அமர்ந்து பேசி முடிவு செய்வார்கள்.மரத்திலுள்ள முத்தாளம்மன் முன்னிலையில்,  பேச்சுவார்த்தை நடப்பதாக நம்புகிறோம். பூவோடு, மாவிளக்கு, தீர்த்த குடங்களை அம்மன் முன்பு வைத்து பூஜை செய்து பின் ஊர்வலமாக எடுத்து  செல்வது வழக்கம். ஊருக்கு பொதுவில் உள்ள மாரியம்மன் கோவில் விசேஷங்கள் குறித்தும் இங்கு அமர்ந்து ஆலோசனை செய்வது  பாரம்பரியமாகும். இவ்வாறு, தெரிவித்தனர்.மடத்துக்குளம் - கொமரலிங்கம் மெயின் ரோட்டில் கிழக்கு நீலம்பூர் பிரிவு உள்ளது. இந்த இடத்திலிருந்து  இரண்டு கி.மீ., தொலைவு, விளைநிலங்களுக்கு மத்தியிலுள்ள ரோட்டில் சென்றால் இந்த கிராமம் உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar