பதிவு செய்த நாள்
10
பிப்
2018
01:02
சென்னை:சென்னை வள்ளுவர் கோட்டத்தில், பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் சார்பில், சிவஜெயந்தி விழா நேற்று துவங்கியது. பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில், இந்தாண்டு சிவ ஜெயந்தி விழா, ஆறு நாட்கள் நடக்கிறது. சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடந்த துவக்க விழாவில், 200க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று, கண்காட்சியை துவக்கி வைத்தனர்.இன்று முதல், அமர்நாத் பனிலிங்கம், 12 ஜோதிர்லிங்கங்களை, பிப்., 14 வரை, தினமும் காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, பக்தர்கள் தரிசிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், பிப்., 9 முதல், 13 வரை, மக்களுக்கு பயனுள்ள பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
ஆறு நாட்கள் நடக்கும் நிகழ்வுகள்:
* பிப்., 9 மாலை, 4:00 மணிக்கு, பெண் பக்தர்களுக்கான விளக்கு தியானம்
* பிப்., 10 காலை, 10:00 மணிக்கு திருநங்கையருக்கான சிறப்பு தியானப் பயிற்சி, மாலை, 4:00 மணிக்கு, பொதுத்தேர்வு எழுதும் மாணவ - மாணவியருக்கான தேர்வு பயத்தை வெல்லுதல் நிகழ்ச்சி
* பிப்., 11 காலை, தமிழ் எழுத்தாளர்கள், அறிஞர்களை கவுரவித்தல், மாலையில், பதற்றத்திற்கு விடை கொடுக்கும் நிகழ்ச்சி
* பிப்., 12 காலை, 10:00 மணிக்கு, அர்ச்சகர்கள், ஆன்மிகவாதிகளை கவுரவித்தல், மாலை, 4:00 மணிக்கு ஊடகம், கலைத்துறையினருக்கு தியானப் பயிற்சி
* பிப்., 13 காலை, 10:00 மணிக்கு, முதியோருக்கான முதுமையிலும் மகிழ்ச்சி, மாலை, 4:00 மணிக்கு வியாபாரிகளுக்கான மன அழுத்தமற்ற வியாபாரம்.