பதிவு செய்த நாள்
12
பிப்
2018
01:02
பழநி: ஞாயிறு விடுமுறை, சுபமுகூர்த்தத் தினத்தை முன்னிட்டு, பழநிமுருகன் கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் மூன்று மணிநேரம் வரை காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர்.தைப்பூசவிழா முடிந்தாலும், பழநிமுருகன் கோயிலுக்கு மதுரை, சிவகங்கை, திருப்பூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பாதயாத்திரை பக்தர்கள், காவடிகள், பால்குடங்கள் எடுத்துவருகின்றனர். நேற்று ஞாயிறு பொதுவிடுமுறை, மற்றும் சுபமுகூர்த்த தினம் என்பதால், ஏராளமான திருமணம், கடைகள் திறப்புவிழா நடந்தது. மலைக்கோயிலில் அதிகாலை முதல் குவிந்த பக்தர்கள் ரோப்கார், வின்ச் ஸ்டேஷனில் இரண்டு மணிநேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயில் பொது தரிசனம் வழியில் மூன்று மணிநேரம் வரை காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இதேப்போல தங்கரதப்புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.