Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூச்சியூரில் போலீஸ் பாதுகாப்புடன் ... மயான ருத்ரியாக எழுந்தருளி அரக்கனை அழித்த அங்காளம்மன் மயான ருத்ரியாக எழுந்தருளி அரக்கனை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோத்தர் இன மக்களின் நள்ளிரவு பண்டிகை ’ஆட்டபபூப்’ கோலாகலம்
எழுத்தின் அளவு:
கோத்தர் இன மக்களின் நள்ளிரவு பண்டிகை ’ஆட்டபபூப்’ கோலாகலம்

பதிவு செய்த நாள்

15 பிப்
2018
01:02

ஊட்டி: கோத்தர் இன மக்கள், தங்களின் பாரம்பரியங்களில் ஒன்றான நடன பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். நீலகிரியில் வாழும் பழங்குடியின மக்கள், தங்களின் பாரம்பரியம், கலாசாரத்தை சிறிதளவும் சிதையாமல் பாதுகாத்து வருகின்றனர். இதில், மஞ்சூர் அருகேயுள்ள குந்தா கோத்தகிரியில் உள்ள கோத்தர் இன பழங்குடியின மக்கள், ’ஆட்டபபூப்’ என அவர்களது மொழியில் அழைக்கும் நடனப்பண்டிகையை கொண்டாடினர். அங்குள்ள மைதானத்தில், நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு துவங்கிய பண்டிகை, 3:30 மணி வரை நீடித்தது. குளிரை விரட்ட, தீ மூட்டி நடனமாடி மகிழ்ந்தனர்.

அங்குள்ள மக்கள் மட்டுமன்றி சோலுார், கோக்கால், திருச்சிக்கடி உட்பட பகுதிகளில் இருந்தும், கோத்தர் இன மக்கள் பங்கேற்றனர். இரவு நடந்த விழாவில், ஆண்கள், பெண்கள், தங்களின் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்றனர். அவர்கள் வீடு, வீடாக சென்று, ஒருவருக்கொருவர் சொந்தம் பாராட்டி, விருந்துண்டு மகிழ்ந்தனர். இரண்டாவது நாளாக, நேற்றுநடந்த பண்டிகையில், பெண்கள் பாரம்பரிய உடையணிந்து, நடனமாடி, பண்டிகையை கொண்டாடினர்.

ஊர் தலைவர் குருபன் கூறியதாவது: எங்களின் குல தெய்வ மான ’அயய்னோர், அம்மனோர்’க்கு,  வாய்மொழி பிரார்த்தனையும், நடன வழிபாடும் தான் பிரதானம்; அவ்வகையில், எங்களின்முன்னோர் காலந்தொட்டு, நடன பண்டிகையை கொண்டாடி வருகிறோம். இதில், ஊர் செழிக்க வேண்டும்; மக்கள், நோயின்றிசுக வாழ்வு வாழ வேண்டும்; காலம் தவறாமல் மழை பொழிய வேண்டும் என்பது போன்ற வேண்டுதல்களை முன்வைப்போம். ஊரில் உள்ள மிகவும் பழமையான மரத்தின் முன்பு இந்த நடனம்நடக்கும். மேலும், எங்கள் ஊரில் இருந்து பெண் எடுத்தோர், கொடுத்தோர் வாழும் ஊர்கள், உறவினர்கள் வாழும் கிராமங்களில் இருந்தும் மக்கள் பண்டிகையில் பங்கேற்பர்; இதன் மூலம், எங்கள் உறவுகள் பலப்படும்; ஒற்றுமை மேம்படும்.இவ்வாறு, குருபன் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மீனாட்சி பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
 புதுச்சேரி; வில்லியனுார் வரதராஜப் பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது. வில்லியனுார் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வண்ண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar