Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழமையான கோவில்களை புதுப்பிக்க ... காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் கோலாகலம் காளியம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் நடைபாதை தடுப்பு சரிவு
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவில் நடைபாதை தடுப்பு சரிவு

பதிவு செய்த நாள்

21 பிப்
2018
01:02

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கிழக்கு மாட வீதியில், கட்டுமான பணியின் போது, நடைபாதை தடுப்பு கற்கள் சரிந்து விழுந்துள்ளன. கடந்த, 2014ல், பாரம்பரிய நகரமாக காஞ்சிபுரம் அறிவிக்கப்பட்டது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, கோவிலை சுற்றிலும் சாலை வசதி, மின்விளக்கு, நவீன கழிப்பறை உள்ளிட்டவற்றுக்காக, மத்திய அரசு 19.99 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

பாரம்பரிய நகரம்: முதற்கட்டமாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர், வரத ராஜப் பெருமாள் ஆகிய கோவில்களின் வெளி பகுதி களில், பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் மூலம், பணிகள் நடந்து வருகின்றன. வரதராஜ பெருமாள் கோவிலை சுற்றிலும், மழைநீர், மின்சாரம், தொலைபேசி கேபிள்கள் செல்ல தனி வசதியுடன் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. சிமென்ட் சாலை, நடைபாதை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக, 8.53 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில், கிழக்கு மாட வீதியின், இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டு, தடுப்பு கற்களில், எஸ்.எஸ்., ஸ்டீல் எனப்படும், துருப்பிடிக்காத உருளை கம்பிகள் பொருத்தப்படுகின்றன. துாண்களின் அடித்தளம் தரமாக அமைக்காததால், மதில் சுவரை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள, சில நடைபாதை தடுப்பு கற்கள், நேற்று முன்தினம் மாலை, திடீரென சரிந்து விழுந்தன. இதே தெருவில், வீடுகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள நடைபாதையின் தடுப்பு கற்களின் அடித்தளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, கையால், லேசாக அசைத்தாலே அசைந்து விடுகிறது. இதனால், ஒட்டுமொத்த நடைபாதை தடுப்புச் சுவரின் உறுதித்தன்மையும் கேள்விக்குறியாக உள்ளது.

ஆய்வு வேண்டும்: இதுகுறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது: தற்போது நடந்து வரும் பணிகள், பல ஆண்டுகளுக்கு பெயர் சொல்ல வேண்டும். ஆனால், அமைக்கும் போதே இடிந்து விழுந்துவிட்டது. அதிகாரிகள் முறையாக கண்காணிக்காததால், ஒப்பந்ததாரர், உறுதியாக அமைக்கவில்லை. இதனால் தான், கட்டிய உடனே இடிந்துள்ளது. பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தின் மூலம் நடைபெற்று வரும் அனைத்து பணிகளையும் மாவட்ட நிர்வாகம் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி அருகே திருத்தங்கலில் நின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஆனி பிரமோற்சவ திருவிழாவை ... மேலும்
 
temple news
கோவை; கொடிசியா வெங்கடேச பெருமாள் கோவிலில் ஆனி மாதம் திருவோண விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
சபரிமலை; நவக்கிரக பிரதிஷ்டைக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. நாளை காலை 11:30 மணிக்கு நவக்கிரக ... மேலும்
 
temple news
காரைக்குடி; சாக்கோட்டையில் உள்ள சாக்கை வீரசேகர உமையாம்பிகை கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar