பதிவு செய்த நாள்
21
பிப்
2018
01:02
சேலம்: சேலம், நெத்திமேடு, தண்ணீர்பந்தல் காளியம்மன் கோவில், 71ம் ஆண்டு மாசித்திருவிழா, கடந்த, 13 இரவு, பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று, பால்குட ஊர்வலம் நடந்தது. நெத்திமேடு, குமரகவுண்டர் இரண்டாவது தெரு, விநாயகர் கோவிலில் இருந்து, காலை, 10:30 மணிக்கு, செவ்வாடை அணிந்த ஆண், பெண் பக்தர்கள் பலர், பால்குடம் ஏந்தி ஊர்வலம் புறப்பட்டனர். சங்ககிரி பிரதான சாலை வழியாக, 11:00 மணிக்கு, கோவிலை அடைந்தனர். பின், காளியம்மனுக்கு பாலாபி?ஷகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை செய்து, பக்தர்கள் வழிபட்டனர்.