Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காஞ்சியின் கருணைக்கடல்... (1935 - 2018) கோவில்களில் தீ விபத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

01 மார்
2018
02:03

ஈரோடு: கள்ளுக்கடை பத்ரகாளியம்மன் கோவிலில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஈரோடு மாநகரில், பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான கள்ளுக்கடை மேடு பத்ரகாளியம்மன் கோவில், குண்டம் திருவிழா கடந்த, 13ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 19ல், கொடியேற்றப்பட்டது. தினமும் காலையில் மூலவருக்கு, 12 வகையான திரவியங்களை கொண்டு, அபி?ஷகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. நேற்று குண்டம் இறங்கும் விழா நடந்தது. அதிகாலை, 5:00 மணிக்கு குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்த கோவில் பூசாரிகள், குண்டம் இறங்கும் பக்தர்களுக்கு பாதுகாப்பாக இருந்து, குண்டம் இறங்கி ஏறும் வரை, பராசக்தி தாயே நீ உடன் வர வேண்டும் என வேண்டிய பின், கோவில் பூசாரிகள் முதலில் குண்டம் இறங்கினர். அவர்களை தொடர்ந்து, 15 நாட்களாக விரதம் கடைபிடித்த, பெண்கள், ஆண்கள், சிறுவர், சிறுமியர், முதியவர் மற்றும் திருநங்கைகள் என, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டம் இறங்குவதற்காக, கோவிலின் முன்பு இருந்து, பாலசுப்ராயலு வீதியின் எல்லை வரை, ஒரு கி.மீ., தூரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். குண்டம் இறங்கிய பின் வெளியில் வந்த, பக்தர்களுக்கு, தன்னார்வலர்கள் பால், பழம், மோர், ராகி கூல், குளிர்பானங்களை வழங்கினர். குண்டம் திருவிழாவை முன்னிட்டு, பத்ரகாளியம்மன் சந்தனகாப்பு அலங்காரத்தில், சிரித்த முகத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  திருவூடல் உற்சவ நிறைவு விழாவை யொட்டி,  உண்ணாமுலையம்மன் சமேத ... மேலும்
 
temple news
பல்லடம்; பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அய்யன் கோவிலில் குவிந்த பக்தர்கள், நீண்ட வரிசையில், ரோட்டில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி முன்பு, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் மாட்டுப்பொங்கல் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில் உள்ள 8 நந்தி பெருமான்களுக்கும், மாட்டுப் பொங்கலையொட்டி சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar