Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரணபலி முருகன் கோயிலில் ... பிளேக் மாரியம்மன் கோவில் விழா: பூக்குண்டமிறங்கி நேர்த்திக்கடன் பிளேக் மாரியம்மன் கோவில் விழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரம்: இன்று மாசி தெப்பம்
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரம்: இன்று மாசி தெப்பம்

பதிவு செய்த நாள்

02 மார்
2018
11:03

திருப்புத்துார்:சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப்பெருமாள் கோயில் மாசித் தெப்பம் உற்சவத்தை முன்னிட்டு நேற்று வெண்ணெய்தாழி அலங்காரத்தில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று தெப்பம் நடைபெறுகிறது.

இக்கோயிலில் மாசித் தெப்ப உற்சவம் பிப்.,21ல் துவங்கியது.தினசரி காலையில் பெருமாள் தேவியருடன் புறப்பாடும், இரவில் வாகனங்களில் திருவீதி உலாவும் நடைபெற்றது.நேற்று ஒன்பதாம் திருநாளை முன்னிட்டு வெண்ணெய்தாழி கண்ணன் அலங்காரத்தில் பெருமாள் புறப்பாடு காலையில் துவங்கியது. தொடர்ந்து தெப்பக்குள மண்டபத்தில் எழுந்தருளினார். மதியம் 12:40 மணிக்குதெப்பம் முட்டுத்தள்ளுதல் நடந்தது. தொடர்ந்து பெருமாளை பக்தர்கள் தரிசித்தனர். தெப்பக்குளம் பகுதியில் பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தினர். இன்று அதிகாலை 5:00 மணிக்கு சயனகோலத்தில் எழுந்தருளியுள்ள மூலவருக்கு அபிஷேகம் நடந்து பக்தர்கள் தரிசனம் துவங்கும்.

பின்னர்காலை 6:30 மணிக்கு ஏகாந்த சேவை அலங்காரத்தில் உற்சவர் பெருமாள் ஸ்ரீதேவி,பூதேவியருடன் தங்கப் பல்லக்கில் திருவீதி வலம் வருவார். வழியில் பக்தர்கள் பட்டு சார்த்தி பெருமாளை சேவிப்பர். தொடர்ந்து தெப்பக்குளத்தை நோக்கி புறப்பாடு நடைபெறும். பகல் 12:00 மணிக்கு தெப்பக்குளம் அருகே தெப்பமண்டபத்தில் எழுந்தருளி @திருக்கண் சாதித்தல்’ நடைபெறும். பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பெருமாள் எழுந்தருளி மதியம் 12:40 மணிக்கு பகல் தெப்பம் துவங்கும். ஒரு முறை வலம் வந்த பின்னர் மீண்டும் பெருமாள் தெப்ப மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். மாசி மகத்தின் பவுர்ணமி மிச்சமான இரவு 10:00 மணிக்கு மேல் பெருமாள் மீண்டும் தெப்பம் எழுந்தருளி இரவு தெப்பம் துவங்கும். நாளைகாலையில் சக்கரத்தாழ்வாருக்கு தீர்த்தவாரியும், பெருமாள் ஆஸ்தானம் எழுந்தருளலுடன் உற்சவம் நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 30-ந்தேதியில் இருந்து ஏப் ரல் 1-ந்தேதி வரை 3 நாட் கள் வசந்த ... மேலும்
 
temple news
சென்னை: ‘பண்ணிசைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்குவதற்கு, மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும்’ என, மத்திய ... மேலும்
 
temple news
தி.நகர்: வேத ஆகம தெய்வத் தமிழிசை மன்றம், ஸ்ரீ கிருஷ்ண கான சபா, எஸ்.பி.எஸ்.கே.சி., டிரஸ்ட் ஆகியவை இணைந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar