Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூரில் வெண்ணெய் தாழி ... பரமக்குடி முருகன் கோயிலில் பால்குட விழா பரமக்குடி முருகன் கோயிலில் பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிளேக் மாரியம்மன் கோவில் விழா: பூக்குண்டமிறங்கி நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
பிளேக் மாரியம்மன் கோவில் விழா: பூக்குண்டமிறங்கி நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

02 மார்
2018
12:03

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவிலில் நேற்று நடந்த குண்டம் திருவிழாவில், பக்தர்கள் பூக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில் மிகவும் பழமை வாய்ந்தது. இக்கோவில் குண்டம் திருவிழா கடந்த பிப்.,15ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பக்தர்கள் தினமும், கொடிக் கம்பத்திற்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டனர். கடந்த, 27ம் தேதி இரவு, 7:00 மணிக்கு, மாமாங்கம் ஆற்றில் இருந்து, கோவிலுக்கு சக்தி அழைத்து வரப்பட்டது.

கடந்த, 28ம் தேதி, காலை, 7:00 மணிக்கு மாவிளக்கு எடுத்து ஊர்வலமாக பிளேக் மாரியம்மன் கோவிலுக்கு வந்து, அம்மனுக்கு மாவிளக்கு வழிபாடு செய்தனர். காலை, 10:00 மணிக்கு, 60 அடி நீளம், மூன்று அடி அகலமுள்ள குண்டம் திறக்கப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு குண்டத்தில் அக்னி வளர்க்கப்பட்டது. அதன்பின், சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார். மாமாங்கம் ஆற்றில் இருந்து பக்தர்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டனர். நேற்று, காலை ஆற்றில் இருந்து சக்தி அழைத்து வந்தனர். கோவில் முன் உள்ள குண்டத்தில், அய்யாசாமி கோவில் பூசாரி ராஜமாணிக்கம் பால் ஊற்றியும், பூக்களை போட்டும் பூஜை செய்தார். முன்னதாக, பிளேக் மாரியம்மன் சிலைக்கு வெண்ெணய் சாத்தப்பட்டது. அதன் பின், பக்தர்கள் குண்டம் இறங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். குண்டத்துக்கு, ஆட்டு கிடா வெட்டி மூடப்பட்டது. இன்று மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நாளை அம்மனுக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar