உத்தமபாளையம், உத்த மபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் தேரோட்டம் நடந்தது. ’ ஹர ஹர மகாதேவா’ கோஷத்துடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் தென்காளஹஸ்தி என்ற சிறப்பு பெற்றது. காலசர்ப்பதோஷ நிவர்த்தி ஸ்தலமாக உள்ளது. இக்கோயில் தேரோட்டம் விழா பிப். 18 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பப். 28 ல் திருக்கல்யாணம் நடந்தது. தொடர்ந்து நேற்று அதிகாலை 5:30 மணிக்கு காளாத்தீஸ்வரரும், ஞானாம்பிகையும் ரதத்தில் ஏறி, சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். 10:30 மணிக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். இதில் ஜமாத் தலைவர் எம்.தர்வேஷ் முகைதீன், பி.டி.ஆர் விஜயராஜன், ஓ.பி.ரவீந்திரநாத், எம்.எல்.ஏ., ஜக்கையன், முன்னாள் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன், அனைத்து சமுதாய சங்க தலைவர் வக்கீல் ராஜேந்திரன், செயல் அலுவலர் செந்தில்குமார், தக்கார் பாலகிருஷ்ணன், இந்து ஆன்மிக நற்பணிமன்ற தலைவர் துரைப்பாண்டியன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்
*தேரோட்டம் துவங்கியபோது வானில் கருடன் மூன்று முறை வட்டமிட்டு பறந்தது. அத்தோடு கோட்டைமேடு, வடக்குத் தெருவிலும் கருடன் வட்டமிட்டதை பார்த்த பக்தர்கள் ’ஹரஹர மகாதேவா ’என கோஷமிட்டனர். பொதுத்துறை வங்கிகள் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கின. சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் முற்றோதுதல் பாடியபடி வந்தனர்.