பதிவு செய்த நாள்
24
மார்
2018
03:03
கூடலூர் : கூடலூர், இரண்டாவது மைல், முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா, 21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், இரவு, 9:00 மணிக்கு வேடன் வயல் ஆற்றிலிருந்து அம்மன் குடி அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.
(மார்ச் 23) முன்தினம், காலை, 11:30 மணிக்கு வேடன்வயல் ஆற்றிலிருந்து பறவை காவடி ஊர்வலம் துவங்கியது. இதில், பக்தர்கள் அலகு பூட்டியும், பால் குடம் எடுத்து பங்கேற்றனர். தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.
(மார்ச் 23), காலை, 10:00 மணிக்கு விளக்கு பூஜையும், தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. (மார்ச் 24), மாவிளக்கு பூஜையும், இரவு, 7:00 மணிக்கு தேர் ஊர்வலம் நிகழ்ச்சியும் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.