Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தேவகோட்டையில் பங்குனி முளைப்பாரி ... காமாட்சியம்மன் ஏகாம்பரநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில், ’ஜாமர்’ பொருத்தம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2018
01:03

திருத்தணி: திருத்தணி முருகன் மலைக்கோவிலில், பக்தர்களிடம் திருட்டு, கவனச் சிதறல் போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க, கோவில் நிர்வாகம் மொபைல்போன்கள் செயல்படாதவாறு, ’ஜாமர்’ கருவி பொருத்தப்பட்டு உள்ளது. திருத்தணி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து, மூலவரை தரிசித்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு வரும் பெரும்பாலான பக்தர்கள், மொபைல்போனுடன், மூலவர் உட்பட அனைத்து சன்னதிகளிலும் சென்று தரிசிக்கின்றனர். இந்நிலையில், மூலவர் அறையில் மட்டும், அனைத்து மொபைல்போன்கள் செயல்படாதவாறு ஜாமர் பொருத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள அனைத்து சன்னதிகளிலும், கோவில் வளாகத்திலும், மொபைல்போன்கள் பேசும் வசதி உள்ளது. இந்நிலையில், சில பக்தர்கள், கோவில் வளாகத்திலேயே மொபைல்போனில், பேசி வருவதால், சக பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.

மேலும், அலைபேசியின் மூலம் பக்தர்கள் பேசிக் கொண்டு வருவதால், பக்தர்கள் இடையே கவனச் சிதறல் ஏற்பட்டு, சில நேரங்களில் நகை, பணம் திருட்டு போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இதனையடுத்து, பக்தர்கள் நலன் கருதி, கோவில் நுழைவு வாயிலில் இருந்து, அனைத்து சன்னதிகள் மற்றும் வளாகம் முழுவதும் மொபைல்போன்கள் செயல்படாதவாறு, நேற்று ஜாமர் கருவி பொருத்தப்பட்டது. இது குறித்து, கோவில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: பக்தர்களின் நலன் கருதியும், திருட்டு, கவனச் சிதறல், மனஅமைதி கெடுதல் போன்ற செயல்களை தடுப்பதற்கு, கோவில் வளாகத்தில் மட்டும், அனைத்து மொபைல்போன்கள் செயல்படாதவாறு, ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. மலைக்கோவில் மற்றும் மாட வீதிகளில், வழக்கம் போல் மொபைல்போன்கள் செயல்படும். இதனால், பக்தர்களுக்கு எவ்வித பாதிப்பும் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar