Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! தெய்வமாக உதவியது சத்ய சாய்சேவா நிறுவனம்: மக்கள் மகிழ்ச்சி! தெய்வமாக உதவியது சத்ய சாய்சேவா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகன் கோவில் படித்திருவிழா : வருவாய் ரூ.33 லட்சம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

04 ஜன
2012
10:01

திருத்தணி : முருகன் கோவிலில் நடந்த திருப்படித் திருவிழா மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகிய மூன்று நாட்களில் மட்டும், 33 லட்சம் ரூபாய் வருமானம் வந்துள்ளது. திருத்தணி முருகன் கோவில் படித்திருவிழா கடந்த, 30ம் தேதி துவங்கியது. மறுநாள், 31ம் தேதி திருப்படி திருவிழா, ஜன., 1ம் தேதி, ஆங்கில புத்தாண்டு தரிசன விழா நடந்தது. தமிழகம், ஆந்திரா, கர்நாடகம் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்து, 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ரொக்கம், தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்களை காணிக்கையாக உண்டியலில் அளித்தனர். சில பக்தர்கள் விரைவு தரிசனம் செய்ய, 25, 50 மற்றும், 100 ரூபாய் சிறப்பு டிக்கெட் பெற்று, மூலவரை தரிசித்தனர். மூன்று நாட்கள் நடந்த விழாவில், பக்தர்கள் அளித்த காணிக்கை, மலைக்கோவில் வள்ளி மண்டபத்தில், கோவில் இணை ஆணையர் தனபால் முன்னிலையில் எண்ணப்பட்டது. உண்டியலில், 16 லட்சத்து, 47 ஆயிரத்து, 741 ரூபாய் ரொக்கம், 22 கிராம் தங்கம், அரை கிலோ வெள்ளி பொருட்கள் கிடைத்துள்ளன. சிறப்பு தரிசன டிக்கெட், மலைக்கோவிலுக்கு செல்வதற்கு வாகனங்களுக்கு நுழைவு கட்டண டிக்கெட் விற்பனை மூலம், 16 லட்சத்து, 69 ஆயிரத்து 987 ரூபாய் கிடைத்துள்ளது. கடந்தாண்டு டிக்கெட் விற்பனையில், 6 லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே கிடைத்தது. மேலும், உண்டியல் வசூலை விட, இக்கட்டணம் மூலம் கூடுதல் வருவாய் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஐப்பசி பூர பால்குட விழா நேற்று நடந்தது.காஞ்சி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை மூலம் 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar