பதிவு செய்த நாள்
30
மார்
2018
04:03
திருத்தணி : ஷீரடி சாய்பாபா கோவில்களில், பாலாபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
திருத்தணி ஒன்றியம், கே.ஜி. கண்டிகை மற்றும் தலையாறிதாங்கல் ஆகிய பகுதிகளில் உள்ள ஷீரடி சாய்பாபா கோவில்களில், நேற்று (மார்ச் 29), வியாழக்கிழமையையொட்டி, மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது.
விழாவையொட்டி, அதிகாலை, 5:00 மணிக்கு, சுப்ரபாதம், காலை, 5:30 மணிக்கு, காகட ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு பாலாபிஷேகம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் சாய்பாபாவிற்கு பாலாபிஷேகம் செய்தனர்.பகல், 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலையில், சந்திய ஆரதி மற்றும் சேஜ் ஆரத்தி நடந்தது. இதில், திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள, பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
அதே போல், நகரி பகுதியில் அமைந்துள்ள சாய் பாபா கோவிலிலும், சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.
திருவள்ளூர் : திருவள்ளூர், ஆனந்த சாய்ராம், பல்லக்கில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவள்ளூர், பெருமாள்செட்டி தெருவில் உள்ள ஓம் ஆனந்த சாய்ராம் தியானக்கூடத்தில், சிறப்பு அபிஷேகம், ஆராதனை, காலை, மதியம் நடந்தது. மாலையில், ஆனந்த சாய்ராம் பல்லக்கில் பவனி வந்தார்.ஒண்டிக்குப்பம், சாயிபாபா கோவிலில், காலை, மதியம், மாலை மற்றும் இரவு என, நான்கு நேரங்களில் ஆரத்தி நடந்தது.இதே போல், தேவி மீனாட்சி நகரில் உள்ள சாய்பாபா கோவிலில், சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடந்தது. நெய்வேலி கிராமத்தில் உள்ள ராகவேந்திரருக்கு, பஞ்சாமிர்த அபிஷேகமும், மதியம், மகா மங்கள ஆரத்தியும், இரவு ஸ்வஸ்தி பூஜையும் நடந்தது.
நாமக்கல்: தொட்டிப்பட்டி, சாய் தபோவனத்தில், ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது. நாமக்கல் அடுத்த தொட்டிப்பட்டி, ஷீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில், பங்குனி மூன்றாவது வியாழனை முன்னிட்டு, சிறப்பு ஆரத்தி, அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை சாய்பாபாவிற்கு பல்வேறு வித வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, காக்கட் என்னும் ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டது; பஜனை நிகழ்ச்சி நடந்தது. பின்னர், மதியான் ஆரத்தி பாடப்பட்டு, வேதங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.