Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ... சென்னை, வானகரம் மச்சக்கார பாலமுருகன் கோவிலில்,ஆதிசேஷ நாராயணனுக்கு கும்பாபிஷேகம் கோலாகலம் சென்னை, வானகரம் மச்சக்கார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி சிலை மோசடி வழக்கு விழாவுக்கு பின் மீண்டும் விசாரணை
எழுத்தின் அளவு:
பழநி சிலை மோசடி வழக்கு விழாவுக்கு பின் மீண்டும் விசாரணை

பதிவு செய்த நாள்

31 மார்
2018
11:03

பழநி : பழநி முருகன் கோவில் ஐம்பொன்சிலை தொடர்பாக, பங்குனி உத்திரவிழா முடிந்த பின் மீண்டும் விசாரணையை துவங்க உள்ளது.திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோவிலு க்கு, 2004ல், ஐம்பொன் சிலை செய்ததில், தங்கம் மோசடி செய்ததாக, நிர்வாக அதிகாரி, கே.கே.ராஜா, ஸ்தபதி முத்தையாவை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு, ஐ.ஜி., பொன்மாணிக் கவேல் கைது செய்துள்ளார்.மேலும், நவபாஷாண சிலையை வெளிநாட்டிற்கு கடத்துவதற்கு முயற்சி நடந்துள்ளதா எனவும், போலீசார் விசாரிக்கின்றனர்.ஐம்பொன் சிலை தயாரிப்பு குழுவில், 2004ம் ஆண்டு இடம்பெற்றிருந்தவர்கள், சிலையின் எடை, செலவு விபரங்கள் அடங்கிய ஆவணங்கள் குறித்து, இணை ஆணையர் செல்வராஜிடம், மார்ச் ௨௮ல், சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் விசாரித்தனர். இணை ஆணையர் செல்வராஜ், மேலாளர் உமா உள்ளிட்ட அதிகாரிகள், கோவில் அலுவலர்களிடம், நேற்று(மார்ச் 29)ல் முன் தினம், காலை முதல் இரவு வரை, ஐ.ஜி., பொன். மாணிக்கவேல் விசாரணை நடத்தினார்.பழநியில் கைப்பற்றிய ஆவணங்களுடன், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று (மார்ச் 30)ல் புறப்பட்டுசென்றனர்.இது குறித்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி ஒருவர் கூறியதா வது:பழநியில் இரு நாட்களாக, ஐம்பொன் சிலை தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்துள்ளோம். பங்குனி உத்திரவிழா நடப்பதால், விசாரணையை ஒத்திவைத்துள் ளோம். கைப்பற்றிய ஆவணங்கள் அடிப்படையில், சிறையில் உள்ள ராஜாவை, காவலில் எடுத்து விசாரிப்போம். 2004ல், பழநி கோவிலில் பணிபுரிந்த அதிகாரிகள், அலுவலர்கள் சிலரி டம் விசாரிக்க வேண்டியுள்ளது.அடுத்தவாரம் மீண்டும் பழநியில் விசாரணையை தொடரத் திட்டமிட்டு உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இரண்டாம் நாள் காலை உற்சவத்தில் இன்று ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா இன்று ... மேலும்
 
temple news
அயோத்தி; உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar