Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திரவுபதியம்மன் கோவிலில் சுபத்திரை ... தினமும் தங்கமயில் வாகனத்தில் வலம் வரும் முருகன்! தினமும் தங்கமயில் வாகனத்தில் வலம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனியில் பிரம்மாண்ட நவபாஷாண ருத்ரன் பூலிங்கம் கோயில்
எழுத்தின் அளவு:
தேனியில் பிரம்மாண்ட நவபாஷாண ருத்ரன் பூலிங்கம் கோயில்

பதிவு செய்த நாள்

28 ஏப்
2018
01:04

தேனி: தேனியில் இருந்து 4 கி.மீ., தொலைவில் அரப்படிதேவன்பட்டியில், வயல் பகுதியில் அழகுற அமைந்துள்ளது சூரியபகவான், ருத்ரன் பூலிங்கம் கோயில். நுழைவாயிலில் ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கும் 600 அடி குகை வரவேற்கிறது. அதற்கு முன் காட்சி தருகிறார் வலம்புரி செல்வநாயகர். ஐந்து தலை நாகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. குகையின் மத்தியப் பகுதியில் கருவறை செல்லும் சிறிய குகை ஆரம்பமாகிறது. அதற்கு முன் வள்ளி தெய்வானை சமேத முருகன், ஏழு கன்னிமார் சிலைகள், கன்னி மூல கணபதி, வில்வ மரத்தால் ஆன 2 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அதன் அருகில் இமயமலை கேதார்நாத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட பனிலிங்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கருவறை செல்லும் குகையின் வழியே குனிந்து சென்றால் அர்த்த மண்டபத்தில் ஆறு அடி உயரத்தில் சிவபெருமான் திருவுருவங்கள் கொண்ட சிலையும் நந்தி சிலையும் உள்ளன. அதன் பின் சித்தர் யாகவேள்வி மண்டபமும், பிரம்மாண்ட ஐந்து தலை நாகங்கள் ஐந்து சூழ முன்றடி ருத்ரன் பூலிங்கம் மூலவர் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. மூலவரை சுற்றி ஐந்து நாகங்கள் காத்துள்ளது போல் கருவறை உள்ளது.

சித்தர் முத்துக்கல்யாணி கூறியதாவது: மூலவர் 3 அடியில் அமைக்கப்பட்டுள்ளது. மேல்பகுதி 1,008 பன்முக ருதராட்சங்களாலும், கீழ் பகுதி 108 சிவன் மலைகளில் இருந்து கொண்டுவரப்பட்ட அரிய மூலிகைகளை வைத்து செய்யப்பட்ட நவபாஷாணம் கீழ்புறத்தில், நிர்மாணிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டார். 2009ல் பிரதிஷ்டை செய்தோம். மூலவர் நெற்றிக்கண் பூரணத்துவம் நிறைந்தது. தினசரி சூரிய ஒளி அவரின் மேல் படும் படி கோயிலின் கட்டுமானத்தை அமைத்துள்ளோம், என்றார். தினமும் பூஜைகள், பிரதோஷ பூஜைகள் நடக்கின்றன. பரதம், யோகப் பயிற்சிகளை பயிற்றுனர் ராஜாமோகன் கற்றுத்தருகிறார். மேலும் விபரங்களுக்கு 94874 39263 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்:  திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடத்தில் கார்த்திகை அமாவாசை தினமான இன்று(19ம் தேதி) ... மேலும்
 
temple news
கோவை; கார்த்திகை மாதம் அமாவாசை தினத்தை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மதுரை: ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தின் தற்போதைய நிலை குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம் புவனாம்பிகை உடனுறை பூலோகநாதர் கோவிலில், அலர்மேலு மங்கை தாயார் சமேத பிரசன்ன ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: கார்த்திகை மாத தேய்பிறை சிவராத்திரியையொட்டி, காஞ்சிபுரம் குபேரபட்டிணத்தில் அமைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar