Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பலப்பட்டறை மாரியம்மன் கோவில் ... சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா சக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
2,500 ஆண்டுக்கு முந்தைய தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:
2,500 ஆண்டுக்கு முந்தைய தொல்பொருட்கள் கண்டுபிடிப்பு

பதிவு செய்த நாள்

11 மே
2018
11:05

திருப்பூர்: கொடுமணல் அகழாய்வில், முதல் முறையாக, அரிச்சுவடி பானை ஓடு, முத்திரை மற்றும் தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த ஓடுகள் என, ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் கிடைத்துள்ளன. திருப்பூர் -- -ஈரோடு மாவட்ட எல்லையில், நொய்யல் நதிக்கரையில், கொடுமணல் கிராமம் அமைந்துள்ளது. 1981ம் ஆண்டு முதல், தஞ்சை தமிழ் பல்கலை, தமிழக தொல்லியல் துறை, புதுச்சேரி தொல்லியல் துறையினர் அகழாய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.பழங்கால மனிதர்களின் வாழ்வியல், அறிவியல் தொழில்நுட்பம், கல்மணிகள் உற்பத்தி பல்வேறு நாடுகளுக்கு வணிகம் என, 2,500 ஆண்டுகள் பழமையான நகருக்கான ஏராளமான தொல்லியல் சான்றுகள், இங்கு கிடைத்து வருகின்றன.

இந்நிலையில், மத்திய தொல்லியல் துறை, பெங்களூரு அகழாய்வு பிரிவு மூலம், கடந்த ஜன., மாதம் அகழாய்வு பணியை துவக்கியது. இதில், ஆயிரக்கணக்கான தொல்பொருட்களும், அரிச்சுவடி பானை ஓடு, சுடுமண் முத்திரை, தச்சரின் துளை ஊசி மற்றும் 300க்கும் மேற்பட்ட தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறித்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர், ஸ்ரீ ராமன் கூறியதாவது:இதுவரை நடந்த ஆய்வுகளின் படி, கொடுமணல், ஒரு சிறந்த தொழில் நகரமாக இருந்திருக்கிறது. உற்பத்தி செய்த பொருட்கள், அந்த காலத்திலிருந்த வணிக வலை தொடர்பு மூலம், இந்தியாவில் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மற்ற பகுதிகளில் தயாரிக்கப்பட்ட பொருட்களும், கொடுமணலுக்கு வந்திருக்க வாய்ப்புள்ளது. கீழ் மட்டத்தில் ஒரு பந்தக்கால் நடுகுழிகளோடு கூடிய ஒரு சதுர வடிவிலான வீடு, தொழிற்கூடம் கண்டறியப்பட்டது.

பிராமி எழுத்துக்கள்: இப்பகுதியில் அதிகளவு வெண் கற்களும், மணிகளை பட்டை தீட்டுவதற்கான கல்லும் கிடைத்ததால், மணிகள் தயாரிப்பு தொழிற்கூடம் இருந்திருக்கும் வாய்ப்புள்ளது. ஒரு சிறிய சிவப்பு நிற பானை ஓட்டின் மீது, அ, ஆ, இ, ஈ என்று, தமிழ் மொழியின் நான்கு உயிர் எழுத்துக்கள் பிராமி வரி வடிவத்தில் எழுத்தப்பட்டுள்ளன. 2 செ.மீ., அளவு கொண்ட முத்திரையின் அடிப்பகுதியில், லவஸ என்ற பிராமி எழுத்துக்கள் காணப்படுகின்றன. தமிழக தொல்லியல் அகழாய்வுகளில் இது போன்ற முத்திரை, முதல் முறையாக கொடுமணலில் கிடைத்துள்ளது.தற்போதைய அகழாய்வில், இரும்பால் ஆன, ௨௦௩ தொல் பொருட்களும், 45 செம்பினால் உருவாக்கப்பட்டதும், ஆறு தங்கத்தினால் ஆன பொருட்களும், 144 தந்தம், எலும்பினால் ஆனதும், 84 தொல் பொருட்கள் சுடு மண்ணாலும், 391 மணிகளும், அவற்றுள் 71 சுடுமண் மணிகளும், 51 சூதுபவளம், 11 செவ்வந்திக்கல், 61 கண்ணாடி பொருட்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. கோடை வெயில் மற்றும் மழை காரணமாக, அகழாய்வு பணிகள், ஜூன் மாதத்துக்கு பின் மீண்டும் துவங்கும்.இவ்வாறு, ஸ்ரீ ராமன் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar