படவேடு ரேணுகாம்பாள் ஆற்றல் மிக்கவள். இங்குள்ள அம்பாளுக்கு மஞ்சள் காப்பு செய்து வழங்கப்படும் தீர்த்தத்தைப் பருகி வந்தால் அம்மை, கண்நோய் முதலான எந்த நோயானாலும் விரைவில் குணமடைகிறதாம். இது போல் நோய்வாய்ப்பட்டு குணமாகாமல் அவதிப்படுவோர் அம்மனை வழிபட்டு ‘மதில் மேல் விடுதல்’ (கோழியை கோயிலின் மேற்பகுதியில் வீசுதல்) செய்தாலும் நோய்கள் குணமாகும், மனநிம்மதி உண்டாகும் என்பது நம்பிக்கை.