செம்பை பார்த்தசாரதி கோவிலில் ஏகாதசி சங்கீத உற்சவம் நிறைவு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2026 02:02
பாலக்காடு; செம்பை பார்த்தசாரதி கோவிலில் 112வது ஏகாதசி உற்சாகத்தையொட்டி நடந்து வரும் சங்கீத உற்சவம் நேற்று வெகு விமர்சியாக நிறைவுபெற்றது. பாலக்காடு மாவட்டம் கோட்டாயி செம்பை பார்த்தசாரதி கோவில் மாசி மாத ஏகாதசி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி நடந்து வரும் நான்கு நாள் சங்கீத உற்சவத்தை கடந்த 24ம் தேதி பிரபல இசை கலைஞர் டி.வி., கோபாலகிருஷ்ணன், துவக்கி வைத்தார்.
தொடர்ந்து இசைக் கலைஞர்களின் சங்கீத ஆராதனை நடைபெற்றன. சங்கீத உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை 9 மணியளவில் தியாகராஜ பாகவதரின் யாசிப்பை நினைவூட்டும் வகையில் உஞ்ச விருத்தி பாடுதல் நடந்தது. தொடர்ந்து 10:00 மணிக்கு மண்ணூர் ராஜகுமாரனுண்ணி தலைமையில் பஞ்சரத்ன கீர்த்தனை நடைபெற்றன. தொடர்ந்து இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து இளம் கலைஞர்களின் சங்கீதா ஆராதனை நடந்தது. மாலை 6.30க்கு சென்னை ராமநாதனின் சக்ஸபோன் நடைபெற்றது. தொடர்ந்து விஜய் ஜேசுதாஸின் இசைக் கச்சேரி நடந்தது. அவருக்கு விவேக் ராஜ (வயலின்), ஹரி (மிருதங்கம்), கோவை சுரேஷ் (கடம்), ஹரீஷ் (கஜ்ஜிரா), வெள்ளிநேழி ரமேஷ் (முகர்சங்) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். இதையடுத்து பிரகாஷ் உள்ளியேரியின் ஹார்மோனியம் கச்சேரி நடந்தது. 10:00க்கு நடந்த அனுப், பார்வதி திலீப் ஆகியோரின் வயலின் கச்சேரியுடன் சங்கீத உற்சவம் நிறைவு பெற்றன. இன்று உற்சவமூர்த்திக்கு நடக்கும் ஆறாட்டு நிகழ்ச்சியுடன் ஏகாதசி உற்சவம் நிறைவுபெறுகிறது.