சனிப்பெயர்ச்சி விழா ஜோதிடம் மாநாடு; புதுச்சேரி கவர்னருக்கு அழைப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28பிப் 2026 02:02
காரைக்கால்; காரைக்கால் திருநள்ளாறு சனிப்பெயர்ச்சி விழாவை முன்னிட்டு ஜோதிடர் மாநாடு புதுச்சேரி கவர்னருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. காரைக்கால் மாவட்டத்தில் உலக பிரசித்திபெற்ற திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வர கோவிலில் ஸ்ரீ சனீஸ்வர பகவான் பக்தர்களுக்கு அருள் புரித்து வருகிறார். இக்கோவிலில் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா வரும் மார்ச் 6ம் தேதி காலை 8.24 மணி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. சனி பெயர்ச்சியை மேலும் சிறப்பிக்கும் வகையில் தருமை ஆதீனம் மற்றும் புதுச்சேரி அரசு இணைந்து நடத்தும் நான்கு நாட்கள் ஜோதிட மாநாடும் நடைபெற உள்ளது.இதனை தொடர்ந்து நேற்று புதுச்சேரி கவர்னர் கைலாசநாதனை தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில்கள் நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன் ஆகியோர் நேரில் சந்தித்து சனிப்பெயர்ச்சி விழா மற்றும் ஜோதிட மாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. இதே போல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள்,அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.