Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிணத்துக்கடவில் சலங்கை மாட்டுக்கு ... அரியலூர் காளியம்மன் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநீலகண்ட நாயனாருக்கு குருபூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2012
11:01

திருப்பூர் : நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனாருக்கு, திருப்பூரில் குருபூஜை விழா நேற்று நடந்தது. கொங்கு குலால சமுதாயப்பேரவை சார்பில் திருநீலகண்டபுரம், செல்வ விநாயகர் கோவிலில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை நடந்தது. பெண் பக்தர்கள் முத்து மாரியம்மன் கோவிலில் இருந்து மேளதாளம் முழங்க ஊர்வலமாக தீர்த்தம் எடுத்து வந்தனர். விநாயகருக்கு புஷ்ப அலங்காரம் செய்து, அபிஷேகம் நடந்தது. திருநீலகண்ட நாயனார் உருவப்படம் வைத்து, அரளி, துளசி, செவ்வந்தி உள்ளிட்ட பலவகை பூக்களால் சிறப்பு அலங்கராம் செய்யப்பட்டது. உணவு பதார்த்தங் கள் படைத்து, திருநீலகண்ட நாயனாருக்கு குரு பூஜை நடந்தது. தொடர்ந்து, திருநீலகண்டரின் வாழ்க்கை வரலாறு பாராயணம் செய்யப்பட்டது; திரளான பக்தர்கள் பங்கேற்று, நாயனாரை வழிபட்டு, வரலாறு கேட்டனர். அடியார்களுக்கு காவி வேட்டி, துண்டு, திருவோடு வழங்கி, உணவு பரிமாறப்பட்டது; வேண்டுதல் நிறைவேறுவதற்காக, பெண்கள் அடியார்களிடம் மடியேந்தி, அன் னத்தை யாசகமாக பெற்றனர். மதியம் 1.00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. * குலால சமுதாய முன்னேற்ற சங்கம் சார்பில், கரட்டாங்காடு ஸ்ரீசித்தி விநாயகர், மாகாளியம்மன் கோவிலில் திருநீலகண்ட நாயனார் குருபூஜை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு, காலை 5.00 மணிக்கு விநாயகர், மாகாளியம்மன் கோவி லில் உள்ள திருநீலகண்ட நாயனாருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. புஷ்ப அலங்காரத்தில் எழுத் தருளிய திருநீலகண்ட நாயனார், வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, அடியார்களுக்கு திருவோடு வழங்கி, அமுது யாசகம் அளிக்கப் பட்டது. பக்தர்கள் திரளாக பங்கேற்று, நாயனாரை வழிபட்டு, அவர் அருள்பெற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar