பதிவு செய்த நாள்
18
ஜூன்
2018
12:06
பரமக்குடி:பரமக்குடி ஓட்டப்பாலம் நந்த கோபாலகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பரமக்குடியில் சத்யபாமா ருக்மணி, நந்தகோபால கிருஷ்ணர்கோயில் புதிதாக கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கும்பாபிஷேக விழா ஜூன் 15 ல் காலை 9:00 மணிக்கு மகா சாந்தி ேஹாமத்துடன் துவங்கியது. அன்று மாலை 4:00 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் இருந்துபுனித தீர்த்த குடங்கள் புறப்பட்டு, ஊர்வலமாக கோயிலை அடைந்தது.தொடர்ந்து முதல்கால யாகபூஜைகளும், பூர்ணாகுதி நிறைவடைந்து, இரவு
அனைத்து சுவாமிகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டன. மறுநாள் யாகபூஜைகள் நடந்தது. நேற்று காலை 10:35க்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவர், பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் அன்னதானமும், மாலை 6:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது. விழாவில் முன்னாள் அமைச்சர் கோகுலஇந்திரா, மாநில யாதவர் சங்க தலைவர் கோபாலகிஷ்ணன் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை யாதவர் வர்த்தக சங்கம், நந்தகோபால கிருஷ்ணா அறக்கட்டளை தலைவர் ராமு, செயலாளர் கண்ணன், பொருளாளர் கோபிநாதன், துணைத் தலைவர் கனகராஜ், துணை செயலாளர் பாஸ்கரன், இணை செயலாளர் கார்மேகம், கவுரவதலைவர் கதிரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
* ராமநாதபுரம் அருகே பேராவூர் பராசக்தியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பராசக்தியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஜூன் 15ல் யாகசாலை பூஜைகளுடன் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு மங்கள இசை, அனுக்ஞை, விக்னஷே்வர பூஜை, கணபதி ேஹாமம் இரவு 9:00 மணிக்கு பூர்ணாகுதி, தீபாராதனை, அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நடந்தது. ஜூன் 16 ல் காலை 7:30 மணிக்கு கோ பூஜை, சூரிய நமஸ்காரம், மாலை மூன்றாம் கால வேத பராயணம், ேஹாமம் நடந்தது. ஜூன் 17 நேற்று காலை 6:00 மணிக்கு விஸ்வரூபம், கலா ஆவாஹனம், வேத பாராயணம், நாடி சந்தானம், தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது. காலை 9:30 மணிக்கு மேல் கோயில் கோபுரங்களில் புனி நீர் ஊற்றப்பட்டு அலங்காரம் தீபாராதனை, மூலவர் அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பொது மக்கள் செய்திருந்தனர்.
* கமுதி அருகே கோரைப்பள்ளத்தில் தோப்படிமுத்தையா சாமி, கருப்பண்ணசாமி ஆகிய கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. சங்கல்பம், விக்னேஸ்வர, புண்யாவாசனம், ஸ்ரீமகாகணபதி, லக்சுமி, சுதர்சன, நவக்கிரக, மிருத்தனேஹாமம், தீபாராதனை உட்பட ஆறு கால யாக பூஜைகள் நாராயணபட்டர், பாலாஜி சிவம் தலைமையில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தபட்டு, கருட வாகன புறப்பாட்டுக்கு பின் கலசத்தில் கும்ப நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. பின் கோமாதா பூஜை நடத்தபட்டு, அன்னதானம் நடந்தது.
* கமுதி எட்டுக்கண் பாலம் அருகே சக்தி சாய்பாபா கோயில், அனுக்கிரக ஆஞ்ச நேயர், அங்காள பரமேஸ்வரி தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது .பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை இளங்கோ செய்திருந்தார்.