Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காமாட்சியம்மன் கோயிலில் வருடாபிஷேக ... திருக்கோளக்குடி திருக்கோளநாதர் கோயில் தேரோட்டம் திருக்கோளக்குடி திருக்கோளநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பாகூர் மூலநாதர் சுவாமி கோவில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2018
12:06

பாகூர்: பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், தேர் திருவிழா நேற்று நடந்தது. பாகூரில் 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில், கடந்த 2014ம் ஆண்டு திருப்பணியும், கோவிலுக்கு புதியதாக தேர் செய்யும் பணியும் நடைபெற்று வந்தது. கடந்த 2015ம் ஆண்டு தேர் செய்யும் பணி முமுமை பெற்று வெள்ளோட்டமும் நடைபெற்றது. தொடர்ந்து, கோவில் திருப்பணிகள் முழுமை பெற்று, கடந்த ஆண்டு நவம்பர் 30ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பின், இக்கோவிலில் 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழா, கடந்த 18ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்து வந்தது.

கடந்த 24ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர்திருவிழா நேற்று நடந்தது. கவர்னர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி, பாப்ஸ்கோ சேர்மன் தனவேலு எம்.எல்.ஏ., ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். வேதாம்பிகைசமேத மூலநாதர் சுவாமி மாட வீதிகளில் தேர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 7.15 மணிக்கு துவங்கிய தேரோட்டம் இரவு 7.15 மணியளவில் நிலையை வந்தடைந்தது. விழாவில், துணை மாவட்ட ஆட்சியர் உதயக்குமார், இந்து அறநிலையை துறை ஆணையர் தில்லைவேல், அரசு செயலர் சுந்தரவடிவேல், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்திரராஜன் மற்றும் ஏராளமான பொது மக்கள்  கலந்து கொண்டனர். விழாவையொட்டி, பாகூர் பகுதியில் உள்ள அரசு பள்ளிகளுக்கு நேற்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மின்துறை உதவிப்பொறியாளர் கண்ணன் தலைமையிலானஅதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், விழாவில் பங்கேற்ற பொதுமக்களுக்கு மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்தும் வகையில், விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கினர். ஏற்பாடுகளை, அறங்காவலர் குழுவினர் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திட்டக்குடி: மாசி மாத கடைசி சனிக்கிழமையொட்டி, பெண்ணாடம் அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில் கோ ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 58வது ஜெயந்தி ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெப்பக்குளத்தில், தெப்பத்தேர் வைபவம் நடந்தது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
திருவள்ளூர்: திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம், நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்பெருமாள் கோவிலில், தங்கத் தேர் செய்வதற்கான முதல் தவணை காசோலையை கும்பகோணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar