பதிவு செய்த நாள்
14
ஜூலை
2018
10:07
பழநி:பழநி முருகன்கோயில், அதன் உபகோயில்களில் தீபம் ஏற்றுவதற்கு பதில், அணையா விளக்கில் நெய், எண்ணெயை ஊற்றி வழிபட ஏற்பாடு செய்துள்ளனர்.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தைத் தொடர்ந்து, தமிழக கோயில்களில் பக்தர்கள் தீபம் ஏற்றுவதற்கு தடை விதிக்க உள்ளனர். பழநியில் முருகன் கோயிலில் தீபம் ஏற்றுவதற்கு
பதிலாக, பாரவேல் மண்டபம், மேற்கு வெளிப்பிரகாரம் தீபக்கம்பம் அருகேயுள்ள அணையா விளக்கில், பக்தர்கள் எண்ணெய், நெய் ஊற்றலாம்.
இதேபோல திரு ஆவினன்குடி, பெரியாவுடையார், பெரியநாயகி யம்மன் கோயில்களிலும் அணையா விளக்குகள் வைக்கப்பட்டு ள்ளது.கோயில் அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோயிலின் சுத்தம், பாதுகாப்பு கருதி பக்தர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.