பதிவு செய்த நாள்
14
ஜூலை
2018
11:07
சாணார்பட்டி: சாணார்பட்டி ஒன்றியம் ராஜக்காபட்டியில் முத்தாலம்மன் கோயில் விழாவை முன்னிட்டு கழுமரம் ஏற்றம் நடந்தது.
ராஜக்காபட்டி, தீத்தாம்பட்டி, கல்லுப்பட்டி, பூசாரிபட்டி, களர்காடு, திடீர் நகர், மேற்குமேடு ஆகிய கிராமத்தினர் சேர்ந்து முனியப்பன், காளியம்மன், பகவதியம்மன், முத்தாலம்மன் ஆகிய சுவாமிகளுக்கு விழா எடுத்தனர். கடந்த ஜூன் 26 அன்று சாட்டுதலுடன் விழா
துவங்கியது.
ஜூலை 6ல் வீரக்கல் கூத்தம்பட்டியில் இருந்து கழுமரம் கொண்டு வரப்பட்டது. ஜூலை 11 அன்று காளியம்மன், பகவதியம்மனுக்கு மாவிளக்கு மற்றும் அக்னிச்சட்டி எடுத்து, பொங்கல் வைத்து கிடா வெட்டி, வழிபாடு நடந்தது. மறுநாள் முத்தாலம்மன் கண் திறந்து வாண வேடிக் கை முழங்க கோயிலுக்கு அழைப்பு நடந்தது.நேற்று (ஜூலை 13)ல் அம்மனுக்கு மா விளக்கு, அக்னிச்சட்டி எடுத்ததை தொடர்ந்து பொங்கல் வைத்து, கிடா வெட்டி, பூஜை நடந்தது.
மாலையில் முக்கிய நிகழ்ச்சியாக 7 ஆண்டுகளுக்கு பிறகு கழுமரம் ஏற்றம் நடந்தது. இன்று அம்மன் மஞ்சள் நீராட்டுடன் பூஞ்சோலை செல்கிறார். ஜூலை 17 அன்று மறு பூஜையுடன்
விழா நிறைவடையும்.