Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ... சென்னிமலை அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கமலவள்ளி நாச்சியார் கோவிலில் ஜேஷ்டாபிஷேகம்: அமுது படைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2018
02:07

திருச்சி: திருச்சி உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோவிலின், ஜோஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சார்பு கோவிலான உறையூர் கமலவள்ளி நாச்சியார் கோவில், 108 வைணவத் கோவில்களில் இரண்டாமிடம் என்ற பெருமையுடையது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் நட்சத்திர கணக்குப்படி ஆனி அல்லது ஆடி மாதத்தில், ஜேஷ்டாபிஷேகம் எனப்படும் பெரிய திருமஞ்சனம் செய்யப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான ஜேஷ்டாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து தங்கக் குடத்தில் நீர் எடுத்து, யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. பின் மூம்மூர்த்திகளான அழகிய மணவாளன், கமலவள்ளி நாச்சியார், உற்சவ நாச்சியார் ஆகியோருக்கு சிறப்ப திருமஞ்சனம் நடந்தது. ஜேஷ்டாபிஷேகத்தின் இரண்டாம் நாளான இன்று, சாதம் வடித்து, நெய், கீரை, முக்கனிகள் சேர்த்து, பெருமாள், நாச்சியாருக்கு அமுது படைக்கப்படும். இந்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும். இதையொட்டி சிறப்புத் திருப்பாவடை நிகழ்ச்சி நடக்கிறது. ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு, கமலவள்ளி நாச்சியார் கோவிலில் நேற்று முழுவதும் பக்தர்கள் தரிசனம் கிடையாது. இன்று மாலைக்கு பிறகே, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர் என, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை;  புலி வாகனன் ஐயப்பனை சபரிமலை சென்று தரிசனம் செய்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஐயப்பன் ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; வடகுரு ஸ்தலமான தட்சிணாமூர்த்தி கோவிலின் பாலாலயம் விமரிசையாக நடந்தது. திருவொற்றியூர், ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், தட்சிணாயன புண்ணிய கால ஆரம்ப வைபவ பூஜை நடைபெற்றது.கோவை ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் விடிய, விடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னிசட்டி‌ ... மேலும்
 
temple news
பிராட்வே; கந்தகோட்டம் முத்துக்குமார சுவாமி கோவில் கும்பாபிஷேகம் இன்று கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar