மேலுார், மேலுார் அருகே அரிட்டாபட்டியில் சில ஆண்டுகளாக மழையின்றி விவசாயம் நடக்கவில்லை. மழை பெய்து உலகம் செழிக்க வேண்டி நேற்று ஏழுமலை பாதுகாப்பு சங்க செயலர் ரவிச்சந்திரன் தலைமையில் மலைவாழ் மக்கள் விரதமிருந்து பட்டை முனியாண்டி சுவாமிக்கு சேவல் வெட்டி பொங்கல் வைத்துவழிபட்டனர். பின்னர் பாறையில் இழையின்றி சாப்பிட்டனர். இதை தொடர்ந்து நேற்று மாலை மழை பெய்தது.