Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
112 அடி ஆதியோகி முன்பு குருபெளர்ணமி ... பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகாம்பரநாதர் கோவிலில் போலீஸ் மீண்டும் ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2018
03:08

காஞ்சிபுரம்:ஏகாம்பரநாதர் கோவில் புதிய உற்சவர் சிலை செய்ததில், முறைகேடு நடந்து உள்ளதாக எழுந்த புகாரின் அடிப்படையில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், நேற்று மீண்டும் ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் இருந்த பழைய உற்சவர் சிலை பழுதடைந்து விட்டதாக கூறி, அறநிலையத் துறை சார்பில், 2015ல் புதிய உற்சவர் சிலை செய்யப்பட்டது. அதற்காக, பொது மக்களிடம் இருந்து தங்கம் நன்கொடையாக பெறப்பட்டது.அந்த சிலையில், 5.45 கிலோ தங்கம் சேர்க்கப்பட்டதாக கூறிய நிலையில், போலீஸ் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தங்கமே சேர்க்கப்படவில்லை என்பது தெரிய வந்தது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த, அண்ணாமலை என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் படி, அந்த வழக்கு, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசுக்கு மாற்றப்பட்டது. அந்த பிரிவின் போலீஸ், ஐ.ஜி., பொன்.மாணிக்கவேல் விசாரணை செய்ததில், புதிய சிலையில் தங்கம் சேர்க்கப்படாதது மீண்டும் உறுதியானது. ஏற்கனவே, இந்த கோவிலில் சோதனை மற்றும் அதிகாரிகளிடம் பல முறை விசாரணை நடந்த நிலையில், நேற்று, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு புதிய, டி.எஸ்.பி., பழனிசெல்வம், ஆய்வாளர் முத்துகுமார் மற்றும் போலீசார், ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சென்று, புதிய உற்சவர் சிலையை ஆய்வு செய்தனர். மேலும், சிலை ஆவண காப்பகத்தில் உள்ள மற்ற சிலைகளையும் ஆய்வு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar