Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆக., 22ல் பக்ரீத் பண்டிகை பெரியகுளத்தில் கிருஷ்ண பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காவடி அலகில் அந்தரத்தில் பறந்து வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஆக
2018
12:08

வீரபாண்டி: காவடி அலகில், அந்தரத்தில் பறந்தபடி, ஊர்வலமாக வந்து, ஏராளமான பக்தர்கள், அம்மனை வழிபட்டனர். ஆடித்திருவிழாவை முன்னிட்டு, ஆட்டையாம்பட்டி, பெரிய மாரியம்மன் கோவிலில், நேற்று, ஏராளமான பெண்கள், குடும்பத்துடன் கோவிலுக்கு வந்து, கோழி, ஆடுகளை பலியிட்டு, பொங்கல் வைத்து, சுவாமியை வழிபட்டனர். விரதமிருந்த பக்தர்கள், பூங்கரகம், தீச்சட்டிகளை ஏந்தி, உடல் முழுவதும் விதவித அலகு குத்தி, காவடி அலகுகளில் அந்தரத்தில் பறந்தபடி, ஊர்வலமாக வந்து, தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். இன்றிரவு வண்டி வேடிக்கை, நாளை மஞ்சள் நீராட்டுதலுடன், திருவிழா நிறைவடையும்.

ரூபாய் நோட்டுகளால்...: ஆட்டையாம்பட்டி, வேலநத்தம், செங்குந்தர் சின்ன மாரியம்மன் கோவிலில், சக்தி அழைத்தலுடன் பொங்கல் வைபவம், கடந்த இரு நாட்களாக நடந்தது. அதை முன்னிட்டு, மூலவர் அம்மனுக்கு, புது ரூபாய் நோட்டுகளால்,சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. நேற்று மாலை, கம்பம் எடுத்து, கங்கையில் சேர்க்கும் நிகழ்ச்சியால், கோவில் முன் நடப்பட்டிருந்த கம்பத்தை, ஏராளமான பக்தர்கள், ஊர்வலமாக எடுத்து வந்து, அதற்கென உள்ள கிணற்றில் விட்டனர். இன்று காலை, தேரில் அம்மன் எழுந்தருளி, திருவீதி உலா வருவார். விரதமிருந்த பக்தர்கள், ஊர்வலத்தில், பூங்கரகம், அக்னி கரகம் எடுத்து வருவர். நாளை, மஞ்சள் நீராட்டு உற்சவத்துடன், திருவிழா நிறைவடையும்.

நெய் விளக்கேற்றி...: நாக, கருட பஞ்சமியை முன்னிட்டு, பனமரத்துப்பட்டி, நாழிக்கல்பட்டி, இச்சாதாரி நாகதேவதை கோவிலில், நேற்று முன்தினம் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து, அம்மனுக்கு பால், தயிறு, தேன், சந்தனம், கரும்புச்சாறு உள்பட, 16 வகை அபி?ஷகம் நடந்தது. அன்னாச்சி, சாத்துக்குடி, மாதுளை, எலுமிச்சை, தேங்காய், பூசணி ஆகியவையில், நெய் விளக்கேற்றி, திரளான பக்தர்கள் வேண்டுதல் வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின ... மேலும்
 
temple news
திருச்சி;  ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத மூன்றாவது  சனிக்கிழமையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; கோவை பீளமேடு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்துார்; பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்ததால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
அரியக்குடி; அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar