Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
600 ஆண்டுகளுக்கு முற்பட்ட கல்வெட்டு ... தவசக்திகள் நிறைந்த தவசிமேடை தவசக்திகள் நிறைந்த தவசிமேடை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெற்றிகளை அள்ளித்தரும் வன்னி விநாயகர்
எழுத்தின் அளவு:
வெற்றிகளை அள்ளித்தரும் வன்னி விநாயகர்

பதிவு செய்த நாள்

18 ஆக
2018
05:08

சாத்தூர்: சாத்தூரில் இருந்து 7 கி.மீ., தூரத்தில் உள்ளது வன்னிவிநாயகர் கோயில். 400 ஆண்டுகள் பழமையான இக்கோயில் சாத்தூர் - கன்னியாகுமரி நெஞ்சலைச்சாலையில் அமைந்துள்ளது. இங்கு வழிப்பட்டால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும். இருக்கன்குடி மாரியம்மன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தவறாமல் இங்கு வந்து தரிசனம் செய்து விட்டு செல்வது வழக்கம். மாதம் தோறும் வரும் சங்கடஹரசதுர்த்தி, விநாயகர் சதுர்த்தி, தை முதல் நாள், ஆங்கில புத்தாண்டு தினங்களில் பக்தர்கள் அலைஅலையாக வந்து தரிசனம் செய்வர்.

முன்பு இக்கோயில் வழியாக கன்னியாகுமரி, கோவில்பட்டி, நாகர்கோவில், மார்த்தாண்டம், மதுரை, திருச்சி என பல்வேறு ஊர்களுக்கு செல்லும் விரைவு பஸ் முதல், டவுன் பஸ்களில் செல்லும் பக்தர்கள், பஸ்சில் இருந்த படியே வணங்கி காணிக்கை செலுத்துவர். தற்போது நான்கு வழிச்சாலைக்காக பாதை மாற்றப்பட்டதால் வரம் வேண்டி இத்திருத்தலத்திற்கு நேரில் வந்து தரிசனம் செய்கின்றனர். வன்னிமரத்தினை மேற்கூரையாக கொண்டு வீற்றிருக்கும் வன்னிவிநாயகரை வணங்கி செல்பவர்களுக்கு காரியத்தில் உள்ள தடைகள் நீங்கி வெற்றி மேல் வெற்றிக்கிட்டும்.


திருமணத் தடைகள் நீங்கும், வியாபாரம் செழிக்கும், குழந்தை பாக்கியம் கிட்டும், நவகிரகதோஷம் நீங்கி வளம் பெருகி, நலம் உண்டாகும். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் விழாக்காலங்கள் தவிர காலை 6:00 மணி - மதியம் 1:00 மணி வரையிலும், மாலை 6:00 மணி - இரவு 8:00 மணி வரையிலும் திறந்திருக்கும். கோயில் பணியாளர் ராமகிருஷ்ணன், “புராண காலத்தில் பாண்டவர்கள் தாங்கள் போர்புரியும் ஆயுதங்களை வன்னிமரத்தின் பொந்தில் பாதுகாப்பாக வைத்து இருந்தனர். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து வைத்து வளமும், நலமும் தருபவராக கருணை மழை பொழிபவராக வன்னிவிநாயகர் வீற்றிருக்கிறார். அவரை விநாயகர் சதுர்த்தியன்று வழிபட்டால் நன்மை எல்லாம் கிடைக்கும், ” என்றார். தொடர்புக்கு 04562 284 633.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் ... மேலும்
 
temple news
நத்தம்; தென் மாவட்டங்களில் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றாக திகழ்வது நத்தம் மாரியம்மன் கோவில் ஆகும். ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்; உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் மாசி மக தேரோட்டம் மார்ச் 12 ல் ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; உத்திரமேரூர் தாலுகா, காக்கநல்லூர் கிராமத்தில் பெரியநாயகி சமேத பெரியாண்டவர் கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஸ்ரீ பர்வத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar