விருதுநகர்: ஆடி மாதத்திலிருந்து தை மாதம் வரை இறைவனுக்குரிய பல விழாக்களும், வைபவங்களும் தொடர்ந்து நடைபெறும் ஒரு காலமாக இருக்கிறது. இவ்விழாக்களில் பெரும்பாலும் பெண் தெய்வங்களை மையபடுத்தி உள்ளது. அப்படி லட்சுமி எனும் பெண் தெய்வத்தை பெண்கள் விரதமிருந்து பூஜிக்கும் ஒரு தினம் தான் வரலட்சுமி நோன்பு. அன்பு, அமைதி, புகழ், இன்பம், வலிமை ஆகியவை வரலட்சுமியின் அம்சங்கள். வரலட்சுமி விரதம் மேற்கொள்பவர்களுக்கு இந்த அம்சங்கள் எல்லம் நிறைந்திருக்கும். எல்லா பெண்களும் இந்த விரதத்தில் பங்கு பெறுவர் என்றாலும் திருமணமான பெண்கள் மாங்கல்யம் கெட்டியாக இருக்கவும், வீட்டில் சுபீட்சம் நிலைக்கவும் இந்த விரத்தை மேற்கொள்வார்கள். இத்தகைய பெண்கள் இதோ வரலட்சுமி விரதம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்கள்.