பழநி: பழநி முருகன்கோயில் உண்டியலில் 28 நாட்களில், ரூ. ஒரு கோடியே 54 லட்சத்து 75 ஆயிரம் வசூலாகியுள்ளது.பழநி முருகன் மலைக்கோயில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. அதில் ரொக்கமாக ரூ.ஒரு கோடியே 54லட்சத்து 75ஆயிரத்து 80, தங்கம் -635 கிராம், வெள்ளி 9 ஆயிரத்து 970 கிராம், வெளிநாட்டு கரன்சிகள் 1,050 கிடைத்துள்ளது. இணைஆணையர் செல்வராஜ், மதுரை அழகர்கோயில் துணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கல்லுாரி மாணவர்கள், வங்கி, கோயில் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.