பதிவு செய்த நாள்
29
ஆக
2018
11:08
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், நிரந்தர மற்றும் தட்டு காணிக்கை உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணப்பட்டது.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு, பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டது. மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த் தலைமை வகித்தார். ஈரோடு உதவி ஆணையர் நந்தகுமார் மற்றும் பொள்ளாச்சி ஆய்வர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதன், திருக்கோவில் பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காணிக்கை எண்ணும் பணியில், பக்தர்கள் ஈடுபட்டனர். கோவிலிலுள்ள, நிரந்தர உண்டியல்களில், 40 லட்சத்து, ஏழாயிரத்து, 266 ரூபாயும்; தட்டு காணிக்கை உண்டியல்களில், 12 லட்சத்து, ஆயிரத்து, 283 ரூபாயும் வசூலாகியது. மேலும், 219 கிராம் தங்கம் மற்றும், 629 கிராம் வெள்ளி இருந்தது.