திருவாடானை: கடம்பாகுடி கிராமத்தில் உள்ள உலகம்மைநாச்சியார் கோயில் திருவிழா நடந்தது. பூக்குழி விழாவில் ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக கோயில் முன் எம்.எல்.ஏ. நிதி மூலம் ரூ. 5 லட்சத்து 50 ஆயிரத்து செலவில் கட்டப்பட்ட கலையரங்க கட்டடத்தை திருவாடானை தொகுதி எம்.எல்.ஏ. கருணாஸ் திறந்து வைத்தார்.