ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியல் ரூ.71 லட்சம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஆக 2018 11:08
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர் செலுத்திய உண்டியல் காணிக்கை ரூ.71லட்சத்து 93 ஆயிரத்து 220 இருந்தது. ராமேஸ்வரம் திருக்கோயிலில் 30 நாட்களுக்கு பிறகு நேற்று சுவாமி, பர்தவர்த்தினி அம்மன், பஞ்சமூர்த்திகள் சன்னதிகள் முன்புள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு, கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் மங்கையர்கரசி முன்னிலையில் எண்ணப்பட்டன. இதில் ரொக்க பணம் 71 லட்சத்து 93 ஆயிரத்து 220 ரூபாயும், தங்கம் 82 கிராம், வெள்ளி 2 கிலோ 381 கிராம் காணிக்கையாக கிடைத்தது. கோயில் உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், கண்காணிப்பாளர் கக்காரின், பஷே்கார்கள் அண்ணாதுரை, கமலநாதன், கலைசெல்வன், கோயில் ஊழியர்கள் மற்றும் பர்வதவர்த்தினி, விவேகானந்தா பள்ளி மாணவிகள் பலர் காணிக்கையை எண்ணினர்.