Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தான்தோன்றியம்மன் கோவிலில் மஹா ... கன்னிமார் சுவாமி கோவிலில் 108 வலம்புரி சங்கு பூஜை கன்னிமார் சுவாமி கோவிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேனியில் 300 டன் கோயில் கருவறை ஜாக்கிகளால் 3.15 அடி உயர்த்தப்பட்டது
எழுத்தின் அளவு:
தேனியில் 300 டன் கோயில் கருவறை ஜாக்கிகளால் 3.15 அடி உயர்த்தப்பட்டது

பதிவு செய்த நாள்

01 செப்
2018
11:09

தேனி, தமிழகத்தில் முதல்முறையாக தேனி வயல்பட்டியில் 300 டன் எடையுள்ள அனுமந்த சேவிதராய பெருமாள் கோயில் கருவறை கட்டடம் , ஆகம விதிப்படி 3.15 அடி உயரத்திற்கு ஜாக்கிகள் மூலம் உயர்த்தப்பட்டது.200 ஆண்டுகால பழமை வாய்ந்த இக்கோயில் மூலஸ்தான கருவறையானது சமதளத்திற்கு கீழ் அமைந்துள்ளது. இதனால் ஆகம விதிப்படி திருப்பணிக் குழுவினர் அக்கட்டடத்தை மட்டும் தரைத்தளத்தில் இருந்து 3.15 அடி உயர்த்த திட்டமிட்டனர்.

24 அடி நீளம், 12 அடி அகலம் கொண்ட கருவறையானது முற்றிலும் கருங்கற்களால் கட்டப்பட்டது.இதன் மொத்த எடை 300 டன் (3 லட்சம் கிலோ). ஹரியானா மாநிலம் யமுனாநகரை சேர்ந்த எம்.சி.எம்.டி., இன்ஜினியரிங் ஒர்க்ஸ் தனியார் நிறுவனம் கருவறையை உயர்த்தும் பணியில் ஈடுபட்டது. 24 நாட்களுக்கு முன் பணியை துவக்கிய 10 ஊழியர்கள், 200 ஜாக்கிகளை வைத்து, கருங்கற்கள் அடங்கிய கருவறையை உயர்த்தினர். 36 அடி உயரமுள்ள கருவறை கட்டடம் 3.15 அடி உயர்த்தப்பட்டு மொத்தம் 39.15 அடியில் நிலைநிறுத்தப்பட்டது.இந் நிறுவனத்தின் சார்பில் தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 1,074 கட்டடங்கள் அடித்தளத்தோடு உயர்த்தப்பட்டுள்ளன. அதில் அதிகபட்சமாக 13 அடி வரை கட்டடம் உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மதுரையில் உள்ள புனித தோமஸ் சர்ச் குருசடை கோபுரம் 4 அடி உயரம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து கோயில் கருவறை கட்டடம் உயர்த்தப்படுவது தேனியிலேயே முதல் முறையாகும்.கோயில் திருப்பணிக்குழுத் தலைவர் குபேந்திரபாண்டியன் கூறியதாவது:கோயில் கருவறை சமதளத்திற்கு கீழ் சென்றதால் உயர்த்தப்பட்டது. அனைத்துப் பணிகளும் முடிந்து கும்பாபிஷேக தேதி முடிவு செய்யப்படும். நிறுவனத்தினர் கருங்கற்கள் சேதமடையாதபடி பணி செய்கின்றனர், என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆனி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழாவில் இறைவனுக்கு அம்மையார் அமுதுபடைக்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; திருச்செந்துார் கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்த நிலையில், வீடு, வீடாக சென்று பிரசாதம் ... மேலும்
 
temple news
சாத்துார்; சாத்துார் வெங்கடாஜலபதி கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நேற்று நடந்தது. வெங்கடாஜலபதி கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar