திருப்பதி : திருமலை திருப்பதி கோயில் நிர்வாகத்தின் சார்பில் கோகுலாஷ்டமி விழா திருப்பதியில் உள்ள வெங்கடேஷ்வரா கோசாலையில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. தேவஸ்தான நிர்வாக அதிகாரி அணில்குமார் பேசுகயைில் நாட்டிலேயே மிகப்பெரியதும் சிறந்ததுமான பசுமடம் பாலமானேரு என்ற இடத்தில் 450 ஏக்கரில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதற்காக ஐம்பது கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு விவசாயிகளுக்கு உதவும் பஞ்சகாவ்யா என்ற இயற்கை உரம் தாயாரிப்பதில் முன்னுரிமை காட்டப்படும் என்றார்.