Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உலக அமைதிக்காக நெல்லையில் ராதா ... சுத்தமல்லி விலக்கு ஜெய்மாருதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவேங்கடநாதபுரம் கோயில் தான் தென் திருப்பதி திருமலை திருப்பதி சின்ன ஜீயர் ஆசி வழங்கி பேச்சு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2012
11:02

திருநெல்வேலி:தென் திருப்பதி என்றால் அது மேலத் திருவேங்கடநாதபுரம் கோயிலை மட்டுமே குறிக்கும். திருப்பதி பெருமாள் தான் மேலத் திருவேங்கடநாதபுரம் கோயிலிலும் அருள் பாலிக்கிறார் என திருப்பதி சின்ன ஜீயர் கோவிந்த ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆசியுரை வழங்கி பேசினார்.தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா இன்று (6ம் தேதி) நடக்கிறது. நேற்றைய யாகசாலை பூஜையில் பங்கேற்க வந்த திருப்பதி சின்ன ஜீயர் கோவிந்த ராமானுஜ ஜீயர் சுவாமிகளுக்கு கோயில் நிர்வாகம், திருப்பணிக்குழு சார்பில் மேளதாளங்களுடன் பூரண கும்ப மரியாதை வரவேற்பு அளிக்கப்பட்டது. யாகசாலை பூஜையில் கலந்து கொண்ட திருப்பதி சின்ன ஜீயர் ஆசியுரை வழங்கி பேசியதாவது:தென் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலில் சிறப்பான முறையில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டு நாளை (இன்று) கும்பாபிஷேக விழா நடக்கிறது. திருமலை திருப்பதியில் தற்போது உற்சவம் நடந்துவருகிறது. தென் திருப்பதி என்ற பெயரில் பல்வேறு கோயில்கள் அழைக்கப்படுகின்றன. தென் திருப்பதி என்றால் அது மேலத் திருவேங்கடநாதபுரம் வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலை மட்டும் தான் குறிக்கும். தென் திசையில் அமைந்துள்ள கோயில் என்பதால் திருப்பதியில் உள்ள பெருமாள் தான் இங்கு அருள்பாலிக்கிறார்.இக்கோயில் பிரார்த்தனை ஸ்தலமாக அமைந்துள்ளது.இங்கு யாகசாலை பூஜை, சம்ப்ரோக்ஷணம் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேக நாள், கருடசேவை நாட்களில் மட்டும் பெருமாளை தரிசித்தால் போதாது. பக்தர்கள் தினமும் கோயிலுக்கு வரவேண்டும். உங்களது பிரார்த்தனைகளை பெருமாளிடம் வேண்டினால் தீர்வு கிடைக்கும்.பெருமாள் அனுக்கிரஹம் இருந்ததால் தான் இந்த சம்ப்ரோக்ஷண விழாவில் கலந்து கொள்ள முடிந்தது. கோயிலுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை தொடர்ந்து செய்யவேண்டும். கும்பாபிஷேகம் செய்தால் மட்டும் போதாது. தினமும் பகவான் நாமங்களை சொல்லவேண்டும். இக்கோயிலில் தேர் திருப்பணியையும் பக்தர்கள் செய்ய முன்வரவேண்டும். இவ்வாறு திருப்பதி சின்ன ஜீயர் கோவிந்த ராமானுஜ ஜீயர் ஆசி வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிள்ளை: கிள்ளை மாசி மக தீர்த்தவாரிக்கு வந்த, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லீம்கள் பட்டு சாத்தி ... மேலும்
 
temple news
சோழவந்தான்: சோழவந்தான் ஜெனக நாராயண பெருமாளுக்கு உபயதாரர் சார்பில் ரூ.22 லட்சத்தில் புதிய தங்க குதிரை ... மேலும்
 
temple news
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லுாரி தமிழ் துறை தலைவர் காளிதாஸ், ... மேலும்
 
temple news
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் மாசி தெப்ப உத்ஸவ பத்தாம் ... மேலும்
 
temple news
 சென்னை: மாசி மக தீர்த்தவாரி உத்சவம் மகம் நட்சத்திரத்தில் சில கோவில்களிலும், மகம் மற்றும் பவுர்ணமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar